Published : 29 Jul 2025 10:48 AM
Last Updated : 29 Jul 2025 10:48 AM

பெண்களை தரக்குறைவாக விமர்சித்த விருதுநகர் யூடியூபரை கைது செய்த புதுச்சேரி போலீஸார்!

யூடியூப்பர் துர்க்கை ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார்.

புதுச்சேரி: யூடியூபில் பெண்​களை தரக்​குறை​வாக விமர்​சித்த விருதுநகர் யூடியூபரை புதுச்​சேரி சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். விருதுநகர் அருகே உள்ள சாத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்த பி.கே.​விஜய் என்​கிற துர்க்கை ராஜ் மீது தமிழகத்​தில் 4 இடங்​களி​லும், புதுச்​சேரி சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தி​லும் புகார்​கள் உள்​ளன.

இவர் மீது சைபர் க்ரைம் இன்​ஸ்​பெக்​டர் கீர்த்தி வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டார். அதைத்​தொடர்ந்து கடந்த 8 மாதங்​களுக்கு முன்பு துர்க்கை ராஜ் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். பின்​னர் ஜாமீனில் வெளியே வந்​தார்.

இந்​நிலை​யில், வழக்குகள் விசா​ரணை​யில் இருக்​கும்​போது, சமூக வலை​தளங்​களில் பிரபல​மாக இருக்​கும் பெண்​களுக்கு மிரட்டல் விடு​வது, அவர்​களு​டைய புகைப்​படத்தை மார்​பிங் செய்து தரக்​குறை​வான வார்த்​தைகளை பதி​விடு​தல் என மீண்​டும் தவறான செயல்​களில் ஈடு​பட்​டார்.

இதுபற்றி புகார்​கள் வந்​த​தால் புதுச்சேரி எஸ்​எஸ்பி நித்யா, எஸ்பி பாஸ்​கரன் உத்​தர​வின்​பேரில் சைபர் க்ரைம் இன்​ஸ்​பெக்​டர்​கள் தியாக​ராஜன், கீர்த்தி தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. இக்​குழு நேற்று முன்​தினம் விருதுநகர் மாவட்டம் சாத்​தூர் வட்​டம் படந்​தாள் கிராமத்​தில் உள்ள இல்​லத்​தில் துர்க்​கை​ராஜை கைது செய்து, புதுச்​சேரி தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு நேற்று ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர்.

இதுபற்றி எஸ்பி நித்யா கூறும்​போது, “யூடியூபில் பிரபல​மாக இருக்​கின்ற பெண்​களை அவர்​களு​டைய சேனலுக்கு சென்று நட்பாக பேசி அவர்​களு​டைய புகைப்​படத்​தை பெற்​று​கொண்​டு, அதில் தரக்​குறை​வான வார்த்​தைகளை சேர்த்து தனது யூடியூப் சேனலில் ஆடியோ லைவ் பதி​விட்டு விமர்​சித்​துள்​ளார். அதே​போல், முக்​கிய தமிழக அரசி​யல் தலை​வர்​களை தரக்​குறை​வாகப் பேசி சமூக வலை​தளத்​தில் வீடியோ வெளி​யிட்​டுள்​ளார்.

சமூக வலை​தளங்​களில் பெண்​கள் மீது தரக்​குறை​வான வார்த்​தைகளைப் பயன்​படுத்தி விமர்​சித்​தாலோ அல்​லது அவர்களுடைய பெண்​மையை இழி​வுபடுத்​தும் வித​மாக நடந்து கொண்​டாலோ அவர்​கள் மீது சட்​டப்​படி கடுமை​யான நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறை​யில் அடைக்​கப்​படு​வர். எனவே, இது​போன்ற வீடியோக்​களை சமூக வலைதள உபயோகிப்​பாளர்​கள் தவிர்க்க வேண்​டும்" என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x