Published : 29 Jul 2025 06:56 AM
Last Updated : 29 Jul 2025 06:56 AM

சென்னை | கொலையில் முடிந்த மதுபான பிரச்சினை: நண்பர்கள் 3 பேர் சிறையிலடைப்பு

வசந்​த​ராஜ், சாந்​தகு​மார், விக்​னேஸ்​வரன்

சென்னை: குரோம்​பேட்​டை, ஆதம் நகரைச் சேர்ந்​தவர் பரந்​தாமன் (43). இவர் நேற்று முன்​தினம் பிற்​பகல் வடபழனி ஆற்​காடு சாலை​யில் உள்ள மது​பானக் கடை அருகே மது அருந்​திக்​கொண்​டிருந்​தார். அப்​போது, அங்கு கோடம்​பாக்​கம் வசந்​த​ராஜ் (39), சாந்​தகு​மார் (37), சாலிகி​ராமம் விக்​னேஸ்​வரன் (28) ஆகிய 3 பேர் வந்​தனர்.

வந்​தவர்​கள் பரந்​தாமன் வைத்​திருந்த மது​பானத்தை கேட்​காமல் எடுத்து குடித்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால், பரந்​தாமனுக்​கும், 3 பேருக்​கும் இடையே வாய்த்​தக​ராறு ஏற்​பட்​டது. ஆத்​திரமடைந்த மூவரும் பரந்​தாமனை கையாலும், ஸ்பேன​ராலும் சரமாரி​யாக தாக்​கி​விட்டு தப்​பினர்.

தகவல் அறிந்து வடபழனி போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து உயிருக்கு போராடிக் கொண்​டிருந்த பரந்​தாமனை மீட்டு கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு சிசிச்சை பலனின்றி அன்​றைய தினமே அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த வசந்​த​ராஜ், சாந்​தகு​மார், விக்​னேஷ்வரன் ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்னர், அவர்​களை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x