Published : 28 Jul 2025 06:30 AM
Last Updated : 28 Jul 2025 06:30 AM

ஈரோடு | உடல்நலப் பாதிப்பால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

ஈரோடு: ஈரோடு அருகே உடல்​நலம் பாதிப்​பால் மனமுடைந்த ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் தற்​கொலை செய்து கொண்​டனர். ஈரோடு அரு​கே​யுள்ள நஞ்சை ஊத்​துக்​குளி பொன்​நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் நாகேந்​திரன் (50).

ஈரோட்​டில் நகை பட்​டறை நடத்தி வந்​தார். இவரது மனைவி சசிகலா தேவி (42), மகள் தான்​யலட்​சுமி (20). தான்​யலட்​சுமி மனவளர்ச்சி குறை​பாடு உள்ள நிலை​யில், சசிகலா தேவிக்கு தைராய்டு பிரச்​சினை இருந்து வந்​துள்​ளது. இந்​நிலை​யில், நாகேந்​திரனுக்கு சமீபத்​தில் வாய் புற்​று​நோய் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது.

குடும்​பத்​தில் மூவருக்​கும் உடல் சார்ந்த பாதிப்பு ஏற்​பட்​ட​தால் மனமுடைந்த நாகேந்​திரன், சசிகலா தேவி, தான்​யலட்​சுமி ஆகியோர் நேற்று முன்​தினம் இரவு விஷமருந்தி தற்​கொலை செய்து கொண்​டனர். தகவலறிந்த போலீ​ஸார் 3 பேரின் சடலங்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

உடல்​நலக்​குறை​பாடு காரண​மாக தற்​கொலை செய்து கொள்​வ​தாக உறவினர்​களுக்கு கடிதம் அனுப்​பி​யுள்ள நாகேந்​திரன், தங்​களது இறு​திச் சடங்​குக்​காக வீட்​டில் ரூ.25 ஆயிரம் வைத்​திருப்​ப​தாக​வும் கடிதத்​தில் குறிப்​பிட்​டுள்​ளார். இதுகுறித்து மொடக்​குறிச்சி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தற்​கொலை என்​பது எந்​தப் பிரச்​சினைக்​கும் தீர்வு இல்​லை. தற்​கொலை எண்​ணத்​துக்கு தீர்வு தேட சினேகா தற்​கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்​கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய​வற்​றில் தொடர்​பு​கொள்​ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x