Published : 28 Jul 2025 05:22 AM
Last Updated : 28 Jul 2025 05:22 AM

ஸ்டாலின், விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: ஒரே நேரத்​தில் முதல்​வர் ஸ்​டா​லின், நடிகர் விஜய் மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகம் மற்​றும் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. சோதனை​யில் வெடிகுண்டு மிரட்​டல் வெறும் புரளி என தெரிய​வந்​தது.

சென்னை எழும்​பூரில் செயல்​பட்டு வரும் மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று அதி​காலை வந்த போனில், எதிர்முனையில் பேசிய நபர் ‘முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும். முடிந்​தால் தடுத்துப் பாருங்​கள்’ எனக் கூறி இணைப்பை துண்​டித்​தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்​டுப்​பாட்டு அறை போலீ​ஸார் உடனடி​யாக உயர் போலீஸ் அதி​காரி​களுக்கு தகவல் தெரிவித்​தனர். இதையடுத்​து, தேனாம்​பேட்டை போலீ​ஸார், வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாயுடன் ஆழ்​வார்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீடு மற்​றும் வீட்டு வளாகம் முழுவதும் அங்​குலம் அங்​குல​மாக மெட்​டல் டிடெக்​டர் கருவி மூலம் சோதித்து பார்த்​தனர்.

பலமணி நேர சோதனைக்கு பின்​னர் சந்​தேகப்​படும்​படி எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதையடுத்​து, வெடிகுண்டு மிரட்​டல் புரளி என தெரிய​வந்​தது. மிரட்​டல் விடுத்த ஆசாமியை தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தேடி வருகின்றனர். இதே​போல், நேற்று காலை காவல் கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் தவெக தலை​வர் நடிகர் விஜய் வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக மிரட்​டல் விடுத்து போன் இணைப்பை துண்​டித்​தார்.

இதையடுத்​து, நீலாங்​கரை போலீ​ஸார் விஜய் வீட்​டுக்கு வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​களு​டன் சென்று சோதனை மேற்​கொண்​டனர். அங்​கும் சந்​தேகப்​படும்​படி எந்த வெடிபொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதையடுத்து இந்த மிரட்​டலும் புரளி என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இந்த மிரட்​டல் விடுத்​தது விழுப்​புரம் மாவட்​டம் மரக்​காணம் அடுத்த கூனிமேடு​குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்த புவனேஷ்வர் என தெரிய​வந்​தது. இவர், சற்று மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர். கடைசி​யாக டிவி​யில் யாரை பார்க்​கிறாரோ அவரது பெயரை குறிப்​பிட்டு வெடிகுண்டு மிரட்​டல் விடுப்​பதை வழக்​க​மாக வைத்​துள்​ளார். இதற்கு முன்​னர் இவர் இதே​போல் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நடிகர் சூர்யா உட்பட பலருக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​துள்​ளார். அவரை போலீ​ஸார் எச்​சரித்து அனுப்பி வைத்​தனர்.

இதே​போல், அண்ணா பல்​கலைக் கழகம் மற்​றும் சென்னை விமான நிலை​யத்​துக்​கும் நேற்று முன்​தினம் இரவு இ-மெ​யில் மூலம் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. சோதனை​யின் முடி​வில் எது​வும் சிக்​க​வில்​லை. அண்ணா பல்​கலைக் கழகத்​துக்கு இது​வரை தொடர்ந்து 21 முறை வெடிகுண்டு மிரட்​டல்​ விடுக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x