Published : 28 Jul 2025 05:06 AM
Last Updated : 28 Jul 2025 05:06 AM

போலீஸாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக் பாஜக பிரமுகர்களை கொல்ல சதி திட்டம்

சென்னை: கைது செய்​யப்​பட்ட தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக்​கிடம் இருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட லேப்​-​டாப்​பில் பாஜக நிர்வாகிகளின் புகைப்​படங்​கள் மற்​றும் அவர்​களின் விவரங்​கள் இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. அவர்​களை தீர்த்​துக்​கட்ட சதித் திட்டம் தீட்​டப்​பட்​டதும் அம்​பல​மாகி உள்​ளது.

தமிழகத்​தில் பல்​வேறு தீவிரவாத செயல்​களுக்கு மூளை​யாக செயல்​பட்ட அபுபக்​கர் சித்​திக்கை 30 ஆண்​டு​களுக்கு பிறகு ஆந்​திர மாநிலம் அன்​னம​யம் மாவட்​டம், கடப்பா அருகே உள்ள ராயச்​சோட்​டில் கடந்த 1-ம் தேதி தமிழக பயங்​கர​வாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்​தனர்.

அவரிடம் இருந்து லேப்​-​டாப் உட்பட ஏராள​மான மின்​னணு சாதனங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும், வீட்​டில் சோதனை நடத்​தி​ய​போது வெடிபொருட்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதையடுத்​து, அவர் சென்னை அழைத்து வரப்​பட்டு எழும்​பூர் நீதிமன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

சென்னை பழைய காவல் ஆணை​யர் அலு​வல​கம் உட்பட 5 இடங்​களில் குண்டு வைத்​தது என ஒன்​றோடு ஒன்று தொடர்​புடைய 7 வழக்​கு​களில் அபுபக்​கர் சித்​திக் சம்​பந்​தப்​பட்​டிருந்​தார்.

இதுதொடர்​பாக, அவரிடம் 6 நாட்​கள் போலீஸ் காவலில் விசா​ரணை நடத்தி முடிக்​கப்​பட்​டது. கடந்த 2012-ம் ஆண்டு பாஜக மாநில மருத்​து​வர் அணி செய​லா​ள​ராக இருந்த அரவிந்த் ரெட்டி கொலை வழக்​கில் அபுபக்​கர் சித்​திக் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. அதுதொடர்​பாக, தற்​போது 5 நாட்​கள் மீண்​டும் போலீஸ் காவலில் எடுத்து அபுபக்​கர் சித்​திக்​கிடம் விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக ஆந்​தி​ரா​வில் அவர் வசித்த வீட்​டுக்கு அழைத்து சென்று அவரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அப்​போது, சில முக்​கிய தகவல்​கள் போலீ​ஸாருக்கு கிடைத்​தது. பாஜக மூத்த தலை​வர் அத்​வானி ரத யாத்​திரை நடத்தி​ய​போது மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்டி பாலத்​தின் கீழே பைப் வெடிகுண்டு வைத்​தது, நாகை மாவட்ட இந்து முன்​னணி தலை​வரின் மனை​வியை வெடிகுண்டு பார்​சல் அனுப்பி கொலை செய்​தது, பாஜக முன்​னாள் எம்​எல்ஏ ஜெகவீர பாண்​டியன் வீட்​டுக்கு வெடிகுண்டு பார்​சல் அனுப்​பியது என மேலும் சில வழக்​கு​களி​லும் அபுபக்​கர் சித்​திக்​குக்கு தொடர்பு இருப்​பது தொிய​வந்​தது.

அது தொடர்​பாக​வும் அவரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், அபுபக்​கர் சித்​திக்​கின் லேப்​-​டாப்பை கைப்​பற்றி போலீஸார் ஆய்வு செய்​தனர். அதில் பல திடுக்​கிடும் தகவல்​கள் தெரிய​வந்​தன. தற்​போதைய தமிழக பாஜக முக்​கிய நிர்வாகிகள், தலை​வர்​கள் என தமிழக பாஜகவை சேர்ந்த 4 பேரின் புகைப்​படங்​களு​டன் அவர்​களை பற்​றிய தகவல்​களும் லேப்​-டாப்​பில் இருந்​துள்​ளன. மேலும், சிலரது புகைப்​படங்​களும் இருந்​துள்​ளது.

இதுபற்​றி​யும் அபுபக்​கர் சித்​திக்​கிடம் போலீ​ஸார் விசா​ரித்​தனர். தற்​போது அபுபக்​கர் சித்​திக் கைது செய்​யப்​பட்டு இருப்​ப​தன் மூலம், பெரும் அசம்​பா​விதங்​கள் நடை​பெறாமல் தடுக்​கப்​பட்​டுள்​ளது என போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இன்று (28-ம் தேதி) விசாரணை முடிவுற உள்ள நிலை​யில் அபுபக்​கர் சித்​திக் மீண்​டும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்பட உள்​ளார். தேவைப்​பட்​டால் அவரிடம் மீண்​டும் வி​சா​ரணை நடத்​தப்​படும்​ என்​று போலீஸ்​ அதி​காரி​கள்​ தரப்​பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x