Published : 26 Jul 2025 06:39 AM
Last Updated : 26 Jul 2025 06:39 AM

ஊட்டி | மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது 

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் காத்​தாடிமட்​டம் அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரிய​ராகப் பணிபுரிந்த செந்​தில்​கு​மார் (50), பள்​ளி​யில் பயிலும் மாணவி​களுக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக கடந்த 3-ம் தேதி மாணவி​கள் புகார் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து குழந்​தைகள் நலன் பாது​காப்​புக் குழும உறுப்​பினர் கொடுத்த புகாரின் பேரில், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்​து, செந்​தில்​கு​மாரை கைது செய்​தனர். இந்​நிலை​யில், செந்​தில்​கு​மாரை குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் கைது செய்​யு​மாறு நீல​கிரி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் என்​‌.எஸ்​‌.நிஷா, மாவட்ட ஆட்​சி​யருக்​குப் பரிந்​துரைத்​தார்.

இதன்​பேரில், மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா, குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் செந்​தில்​கு​மாரை அடைக்​கு​மாறு நேற்று உத்​தர​விட்​டார். குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் அடைப்​ப​தற்​கான ஆணை​யின் நகல் செந்​தில்​கு​மாருக்கு வழங்​கப்​பட்​டு, அவர் கோவை மத்​திய சிறையில் அடைக்​கப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x