Published : 24 Jul 2025 06:40 AM
Last Updated : 24 Jul 2025 06:40 AM

காவல் ஆணையரின் கவனத்தை ஈர்க்க கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் பிரமுகர் கைது

காவல் ஆணையரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காவல் ஆணையருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் பிரமுகர் அப்ரோஸ் கைது செய்யப்பட்டார்.

சென்னை: சென்னை வேப்​பேரி நெடுஞ்​சாலை​யில் உள்ள சாமி தெரு​வைச் சேர்ந்​தவர் காங்​கிரஸ் பிர​முகர் அப்​ரோஸ். இவர் வசிக்கும் பகு​தி​யில் உள்ள சாலை மற்​றும் சாலை​யோரம் உள்ள நடை​பாதை சேதமடைந்து காணப்​பட்​டுள்​ளது.

இதை சரி செய்ய வலி​யுறுத்தி மாநக​ராட்சி அதி​காரி​களிடம் அவர் புகார் தெரி​வித்​துள்​ளார். மேலும், மாநக​ராட்சி உதவிப் பொறியாள​ருக்கு போனிலும் தகவல் தெரி​வித்​துள்​ளார். ஆனால், சாலை சரி செய்​யப்​பட​வில்​லை​யாம்.

இதையடுத்து, மாநக​ராட்சி உதவிப் பொறி​யாளரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது மற்​றொரு​வர் பெரியமேடு காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​துள்​ளனர். ஆனால், இது​வரை இறுதி முடிவு எடுக்கப்​பட​வில்​லை. மேலும் இது தொடர்​பாக அப்​ரோஸ் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தி​லும் புகார் தெரி​வித்​தா​ராம். ஆனால், அங்​கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை​யாம்.

இதனால், ஆத்​திரம் அடைந்த அப்​ரோஸ் பழுதடைந்த சாலையை சரி செய்​யாத சம்​பந்​தப்​பட்ட மாநக​ராட்சி உதவிப் பொறி​யாளர் மற்​றும் புகார் தெரி​வித்​தும் நடவடிக்கை எடுக்​காத போலீ​ஸாரை கண்​டித்​தும், காவல் ஆணை​யரின் கவனத்தை ஈர்க்​கும் வகையிலும், காவல் ஆணை​யருக்கு கருப்​புக் கொடி காட்டும் வகை​யில் வேப்​பேரி​யில் உள்ள காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு நேற்று வந்​தார்.

செல்​போனில் பேஸ்​புக் லைவ் வீடியோ போட்​டுக் கொண்டே காவல் ஆணை​யர் செல்​லும் நுழைவு வாயில் அருகே காரில் வந்தபோது, அப்​ரோஸை அங்கு பாது​காப்​புப் பணியி​லிருந்த போலீ​ஸார் மற்​றும் பெரியமேடு போலீ​ஸார் கைது செய்தனர். அவரது செல்​போனும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x