Published : 23 Jul 2025 05:20 AM
Last Updated : 23 Jul 2025 05:20 AM

போதைப்பொருள் வழக்கில் கைதாகாமல் இருக்க ரூ.50 லட்சம் கைமாறிய புகார்: காவல் ஆய்வாளர், 2 எஸ்ஐக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: ​போதைப்​பொருள் வழக்​கில் கைது செய்​யாமல் இருக்க நடிகர், நடிகை​களிடம் சுமார் ரூ.50 லட்​சம் லஞ்​சம் பெற்ற குற்றச்​சாட்​டில் காவல் ஆய்​வாளர், 2 எஸ்​.ஐ.க்​கள் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளனர். பணம் கொடுத்த சினிமா பிரபலங்​கள் யார் என விசா​ரணை முடுக்கி விடப்​பட்​டுள்​ளது.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் கடந்த மே 22-ம் தேதி நடந்த மோதல் தொடர்​பாக கைதான அதி​முக முன்​னாள் பிர​முகர் பிரசாத் போதைப் பொருள் கடத்​தல் வழக்​கில் கைதான சேலம் சங்​ககிரி பிரதீப்​கு​மார் என்ற பிரடோ, கானா நாட்​டைச் சேர்ந்த ஜான் என்​பவருடன் தொடர்​பில் இருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, போதைப் பொருள் வழக்​கிலும் பிர​சாத் கைது செய்​யப்​பட்​டார்.

அவர் கொடுத்த தகவலின்​பேரில் போதைப் பொருள் வாங்கி பயன்​படுத்​திய புகாரில் நடிகர்​கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரும் போதைப்​பொருள் விற்​ற​தாக கெவின் என்​பவரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இந்த விவ​காரம் குறித்து நுங்கம்பாக்​கம் போலீ​ஸார், சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறிவு பிரிவு மற்​றும் தனிப்​படை போலீ​ஸார் ஒருங்கிணைந்து துப்பு துலக்கி கைது நடவடிக்கை மேற்​கொண்டு வந்​தனர். இதில் பிரபல நடிகர், நடிகை மற்​றும் சினிமா பிரபலங்​களுக்​கும் தொடர்பு இருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

அதன்​படி, நடிகர், நடிகைகள் உள்​ளிட்ட பலருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்டு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு விசாரணைக்கு ஆஜரான பலரிடம் கைது செய்​யாமல் இருக்க லஞ்​சம் தர வேண்​டும், இல்லை என்​றால் சிறை​யில் அடைத்து அதை செய்​தி​யாக வெளி​யிடு​வோம் என மிரட்​டிய​தாக தெரி​கிறது. இதற்கு பயந்த பல சினிமா பிரபலங்​கள் லட்​சக் கணக்​கில் பணத்தை கொடுத்​து, தங்​களை இந்த வழக்​கி​லிருந்து விடுவிக்க கோரிய​தாக தெரி​கிறது. இவ்​வாறு ரூ.50 லட்​சத்​துக்​கும் மேல் பணம் கைமாறிய​தாக கூறப்​படு​கிறது.

இதையறிந்த காவல் ஆணை​யர் அருண், இதை விசா​ரித்து தவறு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்​தர​விட்​டார். அதன்​படி நடத்​தப்​பட்ட ரகசிய விசா​ரணை​யில், லஞ்​சம் கைமாறியது உறு​தி​யானது. இதையடுத்து குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான தனிப்​படையைச் சேர்ந்த திரு​வல்​லிக்​கேணி குற்​றப்​பிரிவு காவல் நிலைய ஆய்​வாளர் சுதாகர், உதவி ஆய்​வாளர்​களான ராமகிருஷ்ணன் (நுங்​கம்​பாக்​கம்), அருண்​மணி (ஆயிரம் விளக்​கு) ஆகியோர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டனர்.

அவர்​கள் மீது துறை ரீதி​யான விசா​ரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது. அவர்​களின் வங்கி கணக்​கு​களும் ஆய்வு செய்​யப்​படு​கிறது. இந்த விவ​காரத்​தில் இன்​னும் சில போலீ​ஸாரும் சிக்க வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது. மேலும் லஞ்​சம் கொடுத்​தவர்​களின்​ விவரம்​ குறித்​தும்​ வி​சா​ரிக்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x