Published : 21 Jul 2025 05:30 AM
Last Updated : 21 Jul 2025 05:30 AM

சென்னை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலை​யத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் இ-மெ​யில் வந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை விமான நிலைய மேலா​ளர் அலு​வல​கத்​துக்கு நேற்று முன்​தினம் இரவு வெளி​நாட்​டிலிருந்து வந்த இ-மெயி​லில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்​டு​கள் வைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், எந்த நேரத்​தி​லும் வெடிக்​கும் என்று குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்​து, விமான நிலைய இயக்​குநருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, அவசரகால பாது​காப்பு ஆலோ​சனைக் குழு கூட்​டம் நடத்​தப்​பட்​டது. தொடர்ந்​து, சென்னை விமான நிலை​யத்​தில் பாது​காப்பு சோதனை​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டன.

விமானங்கள் தாமதம்: பாது​காப்​புப் படை​யினர், வெடிகுண்டு நிபுணர்​கள் இணைந்து விமான நிலை​யத்​தின் அனைத்து பகு​தி​கள் மற்​றும் விமானங்​கள், விமானங்​கள் நிறுத்​தும் இடங்​கள், விமானங்​களுக்கு எரிபொருள் நிரப்​பும் இடங்​கள், பார்​சல்​கள் விமானங்களில் ஏற்​றப்​படும் இடங்​கள், கார் பார்க்​கிங் உள்​ளிட்ட பகு​தி​களில் சோதனை​ நடத்​தினர்.

பயணி​களுக்கு வழக்​க​மாக நடக்​கும் சோதனை​களு​டன் கூடு​தலாக​வும், பயணி​கள் விமானங்​களில் ஏறும் இடங்​களி​லும் சோதனைகள் நடத்​தப்​பட்​டன. ஆனால், வெடிகுண்டு எது​வும் சிக்​க​வில்​லை. இது வழக்​க​மாக வரும் புரளி என்​பதை அதி​காரி​கள் உறுதி செய்​தனர்.

இதனால், நேற்று ஹாங்​காங், பிராங்க் பார்ட், குவைத், துபாய், சார்​ஜா, தோகா, மஸ்​கட், சிங்​கப்​பூர், கோலாலம்​பூர், லண்​டன் உள்ளிட்ட விமானங்​கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமத​மாக புறப்​பட்டு சென்​றன. இந்த வெடிகுண்டு மிரட்​டல் தொடர்​பாக சென்னை விமான நிலைய போலீ​ஸார் வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதனால், சென்னை வி​மான நிலை​யத்​தில்​ பரபரப்​பு ஏற்பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x