Published : 21 Jul 2025 06:47 AM
Last Updated : 21 Jul 2025 06:47 AM

கிருஷ்ணகிரி | அடுத்தடுத்து 8 வாகனங்கள் விபத்து: தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அடுத்​தடுத்து 8 வாக​னங்​கள் விபத்​துக்கு உள்​ளான​தில் தந்​தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓசூரில் இருந்து மைதா மாவு மூட்​டைகளை ஏற்​றிய லாரி கிருஷ்ணகிரிக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.

குருபரப்​பள்ளி பேருந்து நிறுத்​தம் அருகே வந்​த​போது திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த லாரி, முன்​னால் சென்ற கார் மீது மோதி​யது. மேலும், விபத்​தில் சிக்​கிய கார், முன்​னால் சென்ற கார், அடுத்​தடுத்து ஒன்​றன்​பின் ஒன்​றாக 3 லாரி​கள், அரசுப் பேருந்​து, இருசக்கர வாக​னம் ஆகியவை மோதிக் கொண்டன.

இந்த விபத்​தில் இருசக்கர வாக​னத்​தில் வந்த பர்​கூர் தபால்​மேடு அன்​வர் (32), அவரது மகன் அசிம் (7) மற்​றும் 65 வயது மதிக்​கத்​தக்க முதி​ய​வர் உள்​ளிட்ட 3 பேர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். விபத்து காரண​மாக கிருஷ்ணகிரி-பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்​கப்​பட்​டது. விபத்து குறித்து குருபரப்​பள்ளி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x