Published : 19 Jul 2025 07:24 AM
Last Updated : 19 Jul 2025 07:24 AM
சென்னை: ரோந்து பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16-ம் தேதி இரவு, அண்ணா நகர் கிழக்கு, 1-வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞர்கள் இருவர் அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் வீண் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இதை கவனித்த காவலர் மாரியப்பன், அந்த இளைஞர்களை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த அந்த இளைஞர்கள் தரக்குறைவாக பேசியதோடு, காவலர் மாரியப்பனை சரமாரியாக தாக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
காவலரை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த ஐசிஎப், கக்கன்ஜி நகர் அபிலாஷ் (19), நம்மாழ்வார்ப்பேட்டை அஜய்குமார் (21) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT