Published : 19 Jul 2025 05:30 AM
Last Updated : 19 Jul 2025 05:30 AM

கோவையில் ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத் துறை உதவி ஆணையர் கைது

உதவி ஆணையர் இந்திரா

கோவை: கோவை​யில் ரூ.1.50 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய அறநிலை​யத் துறை பெண் உதவி ஆணை​யர் கைது செய்​யப்​பட்​டார்.
சூலூர் அரு​கே​யுள்ள பாப்​பம்​பட்​டி​யில் கிராமத்​தில் தனி​யாருக்கு சொந்​த​மான கோயில் உள்​ளது.

இக்​கோ​யிலுக்கு ஆண்டு வரு​மானம் ரூ.40 லட்​ச​மாக இருப்​ப​தா​லும், கோயில் வரு​வாய் மற்​றும் நிதி மேலாண்​மை​யில் வெளிப்​படைத்​தன்மை இல்​லாத​தா​லும், கோயிலை அறநிலை​யத் துறை​யின் கீழ் கொண்டு வரு​மாறு, கோயில் நிர்​வாகி​களில் ஒரு​வ​ரான சுரேஷ்கு​மார்​(52) உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பாக 12 வாரங்​களில் நடவடிக்கை எடுக்​கு​மாறு அறநிலை​யத் துறைக்கு உத்​தர விட்​டது. இதையடுத்து புகார்​தா​ரர் சுரேஷ்கு​மார், கோவை​யில் உள்ள அறநிலை​யத் துறை அலு​வல​கத்​துக்கு சென்​று, உதவி ஆணையர் இந்​தி​ரா​விடம்​(54) பலமுறை மனு அளித்​தார்.

கோயிலை கையகப்படுத்த... கோயிலை அறநிலை​யத் துறை​யின் கீழ் கையகப்​படுத்த ரூ.3 லட்​சம் லஞ்​சம் தரு​மாறு உதவி ஆணையர் இந்​திரா கேட்​டுள்​ளார். தொடர் பேரத்​துக்​குப் பிறகு ரூ.2 லட்​ச​மாவது தர வேண்​டுமென உதவி ஆணை​யர் வலியுறுத்தியுள்​ளார். லஞ்​சம் கொடுக்க விரும்​பாத சுரேஷ்கு​மார் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புபோலீ​ஸாரிடம் புகார் அளித்​தார்.

போலீ​ஸார் ஏற்​பாட்​டின்​ப​டி, ரசாயனம் தடவிய ரூ.1.50 லட்​சத்தை நேற்று முன்​தினம் இரவு பார​தி​யார் சாலை​யில் உள்ள ஒரு கடை முன்பு உதவி ஆணை​யரிடம் சுரேஷ்கு​மார் கொடுத்​துள்​ளார். அப்​போது, ஏடிஎஸ்பி திவ்யா தலை​மையி​லான போலீ​ஸார் உதவி ஆணை​யர் இந்​தி​ராவைக் கைது செய்​தனர். பின்​னர் அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x