Published : 18 Jul 2025 06:19 AM
Last Updated : 18 Jul 2025 06:19 AM

கும்மிடிப்பூண்டி | 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை தேடும் தனிப்படை போலீஸார்

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தி​யில் சாலை​யில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை தூக்​கிச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை 5 தனிப்​படை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். திரு​வள்​ளூர் மாவட்டம், கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்த 10 வயது சிறுமி, ஆரம்​பாக்​கத்​தில் உள்ள பள்​ளி​யில் 4-ம் வகுப்பு படித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், கடந்த 12-ம் தேதி (சனிக்​கிழமை) வழக்​கம் போல் பள்​ளிக்​குச் சென்ற சிறுமி, மதி​யமே பள்ளி முடிந்​த​தால், ஆரம்​பாக்​கத்​தில் உள்ள தன் பாட்டி வீட்​டுக்கு செல்​வதற்​காக, ரயில் நிலை​யத்தை கடந்து சென்​றுள்​ளார்.

அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒரு​வர், சிறுமியை மாந்​தோப்பு பகு​திக்கு தூக்​கிச் சென்​று, பாலியல் வன்​கொடுமை செய்து​விட்​டு, தப்​பி உள்ளார். இதையடுத்து அழுத​வாறு பாட்டி வீட்​டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்​பவம் குறித்​து, பாட்​டி​யிடம் தெரி​வித்துள்​ளார்.

தொடர்ந்​து, சிறுமி கும்​மிடிப்​பூண்டி கோட்​டக்​கரை​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை பெற்​று, பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வந்​தார். பிறகு, அவர், சென்னை ஆர்​.எஸ்​.ஆர்​.எம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இச்​சம்​பவம் குறித்​து, ஆரம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சம்பவ இடம் அருகே இருந்த கண்​காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்​தனர். அந்த ஆய்​வில், சிறுமியை வடமாநில இளைஞர் ஒரு​வர் பின் தொடர்ந்து செல்​வது தெரிய வந்துள்ளது. இந்த காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

இந்​நிலை​யில், திரு​வள்​ளூர் எஸ்​.பி. விவே​கானந்த சுக்லா உத்​தர​வின் பேரில், திரு​வள்​ளூர், ஊத்​துக்​கோட்​டை, கும்​மிடிப்​பூண்டி ஆகிய 3 காவல் உட்​கோட்​டங்​களின் டிஎஸ்​பிக்​கள் மேற்​பார்​வை​யில் 5 தனிப்​படை போலீ​ஸார் ஆரம்​பாக்​கம், கும்​மிடிப்​பூண்டி உள்ளிட்ட திரு​வள்​ளூர் மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களில், சிறுமியை தூக்​கிச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

தலைவர்கள் கண்டனம்: இச்​சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கடந்த 5 நாட்​களுக்கு முன்பு திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்டி அருகே பட்​டப்​பகலில் பத்து வயது சிறுமியைத் தூக்​கிச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்த நபர் குறித்த சிசிடிவி காட்​சிகள் இருந்தும் இது​வரை குற்​ற​வாளியைக் கைது செய்​யாத காவல்​துறை​யினருக்கு எனது கடும் கண்​டனங்​கள்.

பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: குற்​றம் நடந்து ஐந்து நாட்​கள் கடந்​தும், இன்​னும் குற்​ற​வாளி கைது செய்யப்படவில்லை என்​பது மிக​வும் வருத்​தமளிக்​கிறது. அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி. தினகரன்: புகார் வழங்கி ஐந்து நாட்கள் கடந்​தும் குற்​ற​வாளியைக் கைது செய்ய முடி​யாதது திமுக அரசின் கையாலா​காத்​தனத்​தையே வெளிப்​படுத்​துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x