Published : 18 Jul 2025 06:13 AM
Last Updated : 18 Jul 2025 06:13 AM

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

கோப்புப் படம்

திருச்சி: ​திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து மலேசி​யா​வுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்​பிலான 420 நட்​சத்​திர ஆமை​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது தொடர்​பாக 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர். திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்​பூருக்கு விமானத்​தில் செல்​ல​விருந்த பயணி​களின் உடைமை​களை வான் நுண்​ணறிவு பிரிவு சுங்​கத் துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

சென்​னையை சேர்ந்த 2 பயணி​களின் உடைமை​களை சோதனை செய்​த​போது, அவற்​றில் 420 இந்​திய நட்​சத்​திர ஆமை​கள் இருந்தது தெரிய​வந்​தது. இவ்​வகை ஆமை​கள் மலேசி​யா​வில் ரூ.25 ஆயிரத்​துக்கு விற்​பனை​யா​வ​தால், கடத்​தப்பட இருந்த ஆமை​களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்​கும் என்று கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, ஆமை​களை பறி​முதல் செய்த வான் நுண்​ணறிவு பிரிவு சுங்​கத்​துறை அதி​காரி​கள், அவற்றை வனத் துறை​யினரிடம் ஒப்​படைத்​தனர். மேலும், அவற்​றைக் கடத்த முயன்ற 2 பேரை​யும் கைது செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர். இதுகுறித்து வனத்​துறை​யினர் கூறும்​போது, “கடத்​தல்​காரர்​களால் ரூ.5 ஆயிரத்​துக்கு வாங்​கப்​படும் இந்த ஆமை​கள், வெளி​நாடு​களுக்கு அதி​கள​வில் கடத்​தப்​படு​கின்​றன.

குறைந்​த​பட்​சம் மலேசி​யா​வில் ரூ.25 ஆயிரத்​துக்​கும், அதி​கபட்​ச​மாக அமெரிக்​கா​வில் ரூ.1 லட்​சத்​துக்​கும் விற்​கின்​றனர். இவற்றை வளர்ப்​பது, விற்​பனை செய்​வது, கடத்​து​வது ஆகியவை வன உயி​ரின பாது​காப்​புச் சட்​டத்​தின்​படி தண்​டனைக்​குரிய குற்​றம்’’ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x