Published : 16 Jul 2025 04:53 AM
Last Updated : 16 Jul 2025 04:53 AM

வெடிகுண்டுகள் தயாரிக்க பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதி அபுபக்கர் சித்திக்: போலீஸ் தரப்பில் தகவல்

சென்னை: கோவை குண்​டு​வெடிப்பு உள்​ளிட்ட வழக்​கு​களில் 30 ஆண்​டு​களாக தேடப்​பட்ட தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக் வெடிகுண்​டு​கள் தயாரிக்க பாகிஸ்​தானில் பயிற்சி பெற்​றவர் என்ற பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது. நாகை மாவட்​டம், நாகூரைச் சேர்ந்த தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக் கோவை தொடர் குண்​டு​வெடிப்​பு, இந்து அமைப்​பு​களின் தலை​வர்​கள் கொலை உட்பட பல்​வேறு தீவிரவாத செயல்​களில் ஈடு​பட்டு தலைமறை​வாக இருந்​தார்.

இந்​நிலை​யில், ‘ஆபரேஷன் அறம்’ என்​னும் சிறப்பு நடவடிக்கை மூலம் அபுபக்​கர் சித்​திக்கை ஆந்​திர மாநிலம் அன்​னமய மாவட்டம், கடப்பா அருகே பதுங்கி இருந்​த​போது தமிழக தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் அண்​மை​யில் கைது செய்​தனர். இதே​போல் மற்​றொரு தீவிர​வா​தி​யான முகமது அலி என்ற ஷேக் மன்​சூரை​யும் கைது செய்​தனர். இவர்​கள் சென்னை அழைத்து வரப்​பட்டு கடந்த 1-ம் தேதி எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி புழல் சிறை​யில் அடைத்​தனர்.

தமிழக போலீ​ஸார் கொடுத்த தகவலின்​பேரில் அபுபக்​கர் சித்​திக் பதுங்கி இருந்த வீட்​டிலிருந்து வெடிபொருட்​கள் மற்​றும் ஏராளமான மின்​னணு பொருட்​களை ஆந்​திர போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர். இந்​நிலை​யில், கைதான இரு​வரை​யும் தமிழக போலீ​ஸார் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரித்​தனர். பின்னர் விசாரணை முடிந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக் வெடிகுண்​டு​கள் செய்​வ​தில் கைதேர்ந்தவர். இதற்​காக ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தானில் பயிற்சி பெற்​றுள்​ளார். மேலும், நாச வேலை திட்​டம் தீட்​டு​தல், தீவிர​வா​தி​களுக்கு நிதிஉத​வி, தங்க இடம் ஏற்​பாடு செய்​தல் உட்பட பல்​வேறு வேலைகளை​யும் திரைமறை​வில் செய்துள்ளார்.

தொடக்கத்தில் அபுபக்​கர் சித்​திக் துபாய் தப்பி உள்​ளார். அவரை கைது செய்ய தமிழக போலீ​ஸார் அங்கு சென்​ற​போது அங்​கும் அவர் தலைமறை​வா​னார். பிறகு தமிழகம் திரும்​பிய​வர், அதன் பிறகு ஆந்​தி​ரா​வில் பதுங்கி இருந்​துள்​ளார். வேலூரைச் சேர்ந்த பாஜக பிர​முகர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு உள்​ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் கைதாகி சிறை​யில் இருக்​கும் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்​மா​யில், பிலால் மாலிக் ஆகியோ​ருக்கு அபுபக்​கர் சித்​திக்​தான் குரு​நாதர்.

கடந்த 2011-ம் ஆண்டு பாஜக மூத்த தலை​வர் அத்​வானி ரதயாத்​திரை​யின் போது மதுரை​யில் பாலத்​தின்​கீழ் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்​றும் கோவை குண்டு வெடிப்பு வழக்​கு​களில் அபுபக்​கர் சித்​திக்கை காவலில் எடுத்து விசா​ரிக்க முடிவு செய்​துள்​ளோம். கரோனா பேரிடரின்​போது அபுபக்​கர் சித்​திக்​கும் முகமது அலி​யும் ஹரி​யானா சென்று அங்​கிருந்து துப்​பாக்​கி​களை வாங்கி வந்து பதுக்கி வைத்​துள்​ளனர். அவற்றை பறி​முதல் செய்​வதற்​காகவே முகமது அலியை மட்​டும்​ ஆந்​திர போலீ​ஸார்​ அழைத்​து சென்றுள்ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x