Published : 15 Jul 2025 06:12 AM
Last Updated : 15 Jul 2025 06:12 AM

சென்னை | ஓட்டலில் கஞ்சா விருந்து: நடிகர், வழக்கறிஞர் உட்பட 10 பேர் கைது

சென்னை: ​காதல் திரு​மணத்தை கொண்​டாடும் வகை​யில் ஓட்​டலில் நடந்த கஞ்சா விருந்து தொடர்​பாக நடிகர், வழக்​கறிஞர்உட்பட 10 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள பிரபல​மான ஓட்​டலில் கஞ்சா விருந்து நடப்​ப​தாக பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, நேற்று முன்​தினம் சம்​பந்​தப்​பட்ட ஓட்​டலுக்​குள் போலீ​ஸார் திடீரென நுழைந்து அறை​களைப் பார்​வை​யிட்​டனர். அப்​போது ஓர் அறை​யில் இளைஞர்​கள் கும்​பலாக ஆட்​டம், பாட்​டம், கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தனர். சினிமா பாடல்​களை ஒலிக்​க​விட்டு நடன​மும் ஆடிக் கொண்​டிருந்​தனர்.

அவர்​களிடம் விசா​ரித்​த​போது, அவர்​கள் கஞ்சா போதை​யில் நடன​மாடியது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த சென்னை சூளை ஜெகதீஸ்​வர்​(34), கொளத்​தூர் சந்​தோஷ்(27), அம்​பத்​தூர் தீபக்​(27), காமேஷ்(25), புழல் சூரப்​பட்டு அக்சய் ராஜீ(21), திரு​வள்​ளூர் ரோகித்​(21), கிருஷ்ணபரிக்​(20), ஜிலான் (28), சரத்​கு​மார்​(32), பூந்​தமல்லி மதன்​கு​மார்​(29) ஆகிய 10 பேரையும் போலீ​ஸார் கைது செய்து காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அவர்​களிட​மிருந்து கஞ்​சா, உயர் ரக கஞ்சா ஆயில் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்ட ஜெகதீஸ்​வர் கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் காதல் திரு​மணம் செய்​துள்​ளார். இதைக் கொண்​டாடும் வகை​யில் அவர் நண்​பர்​களுக்கு ஓட்​டலில் விருந்து வைத்​துள்​ளார். அப்​போது, கஞ்சா பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், ஜெகதீஸ்​வர் சினி​மா​வில் நடித்​துள்​ளார். அவருடன் கைதானவர்​களில் சிலர் வழக்​கறிஞர், யூடியூபர், பிசி​யோதெரபி உட்பட பல்​வேறு பணி​களைச் செய்​து​வரு​வது தெரிய​வந்​த​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x