Published : 14 Jul 2025 06:17 AM
Last Updated : 14 Jul 2025 06:17 AM

சென்னை | மயக்கம் வருவதாக பாவனை செய்து கால் டாக்ஸியை திருடி தப்பிய கார் ஓட்டுநர் கைது

சென்னை: பயணி​போல் நடித்​து, கால் டாக்​ஸியை திருடி தப்​பிய கார் ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டார். ராணிப்​பேட்டை மாவட்​டம், அரக்​கோணத்​தைச் சேர்ந்​தவர் சுரேஷ்கு​மார் (43). சென்​னை​யில் தங்கி சொந்​த​மாக கால் டாக்ஸி ஓட்டிவரு​கிறார். இவர் கடந்த 11-ம் தேதி இரவு பயணி ஒரு​வரை கோயம்​பேட்​டில் இறக்​கி​விட்டு சற்று தொலை​வில் சென்று அடுத்த அழைப்​புக்​காக காத்​திருந்​தார்.

நள்​ளிரவு பூந்​தமல்லி செல்ல வேண்​டி, வந்த அடுத்த புக்​கிங்​கில் தொடர்பு கொண்ட பயணி ஒரு​வரை கோயம்​பேட்​டில் றிக்கொண்டு செல்​லும்​போது, வாடிக்​கை​யாளர், ‘மயக்​கம் வரு​வது​போல உள்​ளது; குடிக்க தண்​ணீர் வேண்​டும்; கடை​யின் அரு​கில் நிறுத்​துங்​கள்’ என கூறி​யுள்​ளார்.

சுரேஷ்கு​மார், பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் ஒரு கடை​யின் அரு​கில் காரை நிறுத்​தி​விட்​டு, அவசர அவசர​மாக இறங்கி தண்​ணீர் பாட்​டில் வாங்கி வரு​வதற்​குள் வாடிக்​கை​யாள​ராக வந்​தவர் கால் டாக்​ஸியை ஒட்​டிச்சென்​று​விட்​டார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமார் இதுகுறித்து கோயம்​பேடுகாவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். முதல் கட்​ட​மாக சம்பவ இடம் மற்​றும் அதை சுற்றி பொருத்​தப்பட்​டிருந்த சிசிடிவி காட்​சிகளை கைப்​பற்றி துப்பு துலக்​கினர். இதில், வாடிக்​கை​யாளர் போல நடித்​து, கால் டாக்​ஸியை திருடி தப்​பியது சேலம் மாவட்​டம் அழகாபுரத்​தைச் சேர்ந்த முகமது அஜ்மல் (27) என்​பது தெரிய​வந்​தது. தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

சொந்த கார் இல்​லாத​தால் கார் ஒன்றை திருடி, அதை வைத்து பிழைத்​துக் கொள்​ளலாம் என்ற எண்​ணத்​தில்​ ​காரை முகமது அஜ்மல் திருடி​யுள்​ள​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​. தொடர்​ந்​து வி​சா​ரணை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x