Published : 14 Jul 2025 06:09 AM
Last Updated : 14 Jul 2025 06:09 AM

சென்னை | போதை ஸ்டிக்கர், போதை மாத்திரை, கஞ்சா ஆயில் என போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கும்பல் கைது

சென்னை: ​சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனை​யில் ஈடு​படு​பவர்​களை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்​படை​யினருடன் போதை பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸாரும் ஒருங்​கிணைந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்​சி​யாக, போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு தனிப்​படை​யினர் மற்​றும் மதுர​வாயல் போலீ​ஸார் நேற்று முன்​தினம் மாலை, மதுர​வாயல், காமாட்சி நகர் 2-வது மெயின் ரோட்​டில் கண்​காணித்​தனர்.

அப்​போது, அங்கு சட்​ட​விரோத​மாக போதைப் பொருட்​கள் வைத்​திருந்த மதுர​வாயல் வசந்த் (23), ஆகாஷ் (24), அருண் பரிஷித் (27) பவேஷ் (21), காரனோடை கார்த்​திக் (27), முகப்​பேர் கிழக்கு கவுதம் (28), சிதம்​பரம் அம்​மாபேட்டை ராஜ்கு​மார் (27), செங்​குன்​றம் தினேஷ்கு​மார் (24), சூளைமேடு திவாகர் (27), கீழ்ப்​பாக்​கம் ரூபன் (26) ஆகிய 10 பேரை பிடித்து விசா​ரித்​தனர்.

அப்​போது, அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாக பதில் அளித்​தால், அவர்​களின் உடைமை​களை சோதித்​த​போது அதற்​குள் போதை ஸ்டாம்​பு, போதை மாத்​திரைகள், உயர் ரக கஞ்சா ஆயில் உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான போதைப் பொருட்​களை மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

இவற்றை விற்​பனை செய்ய முயன்​ற​போது அவர்​களை அடை​யாளம் கண்​டு, போலீ​ஸார் அவற்றை பறி​முதல் செய்து 10 பேரை​யும் கைது செய்​தனர். தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x