Published : 13 Jul 2025 11:20 AM
Last Updated : 13 Jul 2025 11:20 AM
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் 35 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விடுதியின் உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா ஆகியோர் விடுதியை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் விடுதியில் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றபோது சிறுமிகள் காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் கூறினர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், உரிமையாளர் அருள்தாஸ், பிரியா, ஓட்டுநர் பழனி ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT