Published : 11 Jul 2025 07:16 AM
Last Updated : 11 Jul 2025 07:16 AM

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா 29 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் கைது

கோவை: கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கில் தேடப்​பட்டு வந்த டெய்​லர் ராஜா, 29 ஆண்​டு​களுக்கு பிறகு கைது செய்​யப்​பட்​டார். 1998-ல் கோவை​யில் நடந்த குண்​டு​வெடிப்​பு​களில் 58 பேர் கொல்​லப்​பட்​டனர். இது தொடர்​பாக சிபிசிஐடி சிறப்​புப் புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

இவ்​வழக்​கில் அல்​-உம்மா இயக்​கத்​தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும், உக்​கடம் பிலால் காலனியைச் சேர்ந்த டெய்​லர் ராஜா (எ) ஷாஜ​கான் ஷேக் (48), முஜிபுர் ரஹ்​மான் ஆகியோரை போலீ​ஸார் தேடி வந்​தனர். இரு​வர் குறித்த தகவல்​களைத் தெரி​வித்​தால் ரூ.2 லட்​சம் லட்​சம் சன்​மானம் வழங்​கப்​படும் என போலீ​ஸார் தெரி​வித்​திருந்​தனர்.

இதற்​கிடை​யில், கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கு, மேற்கு மண்டல தீவிர​வாத தடுப்​புப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டு, எஸ்​.பி. பத்​ரி​நா​ராயணன் தலை​மையி​லான போலீ​ஸார் இரு​வரை​யும் தேடி வந்​தனர். கடந்த வாரம் ஆந்​தி​ரா​வில் பதுங்​கி​யிருந்த அபுபக்​கர் சித்​திக், முகமது அலி ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதையடுத்து கிடைத்த தகவல்​கள் அடிப்​படை​யில், கர்​நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்​டத்​தில் தலைமறை​வாக இருந்த டெய்​லர் ராஜாவை தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் கைது செய்​து, கோவைக்கு அழைத்து வந்​தனர். கோவை ஜே.எம்​.5-வது நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட டெய்​லர் ராஜாவை, வரும் 24-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்​திரேட் உத்​தர​விட்​டார். தொடர்ந்து அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இதுகுறித்து காவல் துறை உயர​தி​காரி​கள் கூறும்​போது, “1996-ல் கோவை சிறை ஜெயிலர் பூபாலன் பெட்​ரோல் குண்டு வீசி கொல்​லப்​பட்​டார். அதே ஆண்​டில்​,​நாகூரில் சயி​தா, 1997-ல் மதுரை​யில் ஜெயிலர் ஜெயப்​பிர​காஷ் ஆகியோ​ரும் கொல்​லப்​பட்​டனர். இந்த வழக்​கில் முக்​கியக் குற்​ற​வாளி​யான டெய்​லர் ராஜா தலைமறை​வாக இருந்​தார்.

அல்​-உம்மா இயக்​கத்​தில் தீவிர​மாக இருந்த அவர், கோவை குண்​டு​வெடிப்பு சம்​பவத்​துக்கு வெடிமருந்து சப்ளை செய்​த​தில் முக்​கியப் பங்கு வகித்​தார். 29 ஆண்​டு​கள் தலைமறை​வாக இருந்த டெய்​லர் ராஜா கைது செய்​யப்​பட்​டுள்​ளார்” என்​றனர்.

முதல்​வர் ஸ்டா​லின் பாராட்டு: இது தொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில், “2023-ல் தீவிர​வாத தடுப்​புப் படை (ஏடிஎஸ்) உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 30 ஆண்​டு​களாக தமிழ்​நாடு காவல் துறை, மத்​திய அரசின் புல​னாய்வு அமைப்​பு​கள், அண்டை மாநில காவல் துறை​யினர் என யாருக்​கும் பிடிப​டா​மல் இருந்த அபுபக்​கர் சித்​திக் உள்​ளிட்ட 3 முக்​கிய தீவிர​வா​தி​களை ஏடிஎஸ் கைது செய்​துள்​ளது.

உள்​நாட்​டுப் பாது​காப்​பில் நாட்​டிலேயே தமிழக காவல் துறை முன்​னிலை வகிக்​கிறது என்​பதை மீண்​டும் நிலை​நாட்​டி​யுள்ள தீவிர​வாத தடுப்​புப் படை​யினருக்​கும், அவர்​களை வழிநடத்​திய நுண்​ணறி​வுப் பிரிவு அலு​வலர்​களுக்​கும் பாராட்​டு​கள்” என்று பதி​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x