Published : 09 Jul 2025 07:03 AM
Last Updated : 09 Jul 2025 07:03 AM

சென்னை | திரைப்படங்களுக்கு பயன்படுத்தும் போலி பணத்தை வங்கியில் செலுத்த முயன்ற 2 பேர் கைது

சென்னை: திரைப்​படங்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் போலி பணத்தை வங்​கி​யில் செலுத்த முயன்​றவர் உள்பட இரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள வங்கி ஒன்​றுக்கு 40 வயதுடைய ஆண் நபர் ஒரு​வர் நேற்​று​முன்​தினம் வந்​தார். அவர் பையில் வைத்​திருந்த ரூ.5.11 லட்​சம் பணத்தை வங்​கி​யில் செலுத்த முயன்​றார்.

சந்​தேகம் அடைந்த வங்கி ஊழியர்​கள் அதை பரிசோ​தித்து பார்த்​த​போது அவை அனைத்​தும் போலி ரூபாய் நோட்​டு​கள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து உடனடி​யாக காவல்​துறைக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. கிண்டி போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து சென்று போலி ரூபாய் நோட்​டு​களை வைத்​திருந்த நபரை காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். இதில், பிடிபட்​டது கடலூரை சேர்ந்த செந்​தில் குமார் (44) என்​பதும், சென்​னை, பம்​மலை சேர்ந்த சாம் பிர​வீன் சந்​தன்​ராஜ் (44) என்​பவர் இந்த பணத்தை கொடுத்து அனுப்​பியதும், மேலும், இந்த பணம் திரைப்​படங்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் போலி பணம் என்​பதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இவர்​கள் இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x