Published : 09 Jul 2025 06:12 AM
Last Updated : 09 Jul 2025 06:12 AM

தஞ்சாவூர் அருகே கார் - சரக்கு ஆட்டோ மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே குருங்களூர் பகுதியில் விபத்துள்ளான கார் மற்றும் சரக்கு வேன். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ் |

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் அருகே கார், சரக்கு வேன் மோதிய விபத்​தில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 பேர் உயி​ரிழந்​தனர். சென்னை பெருங்​களத்​தூரைச் சேர்ந்​தவர் குமார்​(57). இவர், மனைவி ஜெயா(55), மகள் துர்​கா(32), மரு​மகன் ஸ்டா​லின்​(36), பேத்தி இதழினி தூரி​கா(3), மற்​றொரு மகள் மோனிஷா(30) ஆகியோ​ருடன் கும்​பகோணம், தஞ்​சாவூர் பகு​தி​களில் உள்ள கோயில்​களுக்கு செல்​வதற்​காக நேற்று முன்​தினம் காரில் புறப்​பட்​டார். காரை ஸ்டா​லின் ஓட்​டி​னார்.

கும்​பகோணம் பகு​தி​யில் உள்ள கோயில்​களில் அனை​வரும் நேற்று சுவாமி தரிசனம் செய்து விட்​டு, தஞ்​சாவூர் பெரிய கோயிலுக்​குப் புறப்​பட்​டனர். தஞ்​சாவூரை அடுத்த குருங்​களூர் பாலம் அருகே வந்​த​போது, எதிரே விதி​முறையை மீறி எதிர்​திசை​யில் நாற்​றுகளை ஏற்​றிக் கொண்டு வந்த சரக்கு வேனும், காரும் மோதிக் கொண்​டன. இந்த விபத்​தில் ஜெயா அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். காயமடைந்த மற்ற அனை​வரை​யும் அக்​கம்​பக்​கத்​தினர் மீட்​டு, தஞ்​சாவூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

வழி​யிலேயே துர்​கா, குமார், சிறுமி இதழினி தூரி​கா ஆகியோர் உயி​ரிழந்​தனர். மோனிஷா, ஸ்டா​லின் மற்​றும் சரக்கு வேன் ஓட்​டுநர் உதா​ரமங்​கலத்தை சேர்ந்த விக்​னேஷ் ஆகியோ​ருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. விபத்து குறித்து தஞ்​சாவூர் தாலுகா போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x