Published : 08 Jul 2025 05:42 AM
Last Updated : 08 Jul 2025 05:42 AM

சென்னை | ஸ்டீல் நிறுவனத்துக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆந்திர மாநில தொழிலதிபர் கைது

சென்னை: ஸ்​டீல் நிறு​வனத்​துக்​குள் நுழைந்​து, துப்​பாக்​கியை காட்டி மிரட்​டிய ஆந்​திர தொழில​திபர் சென்​னை​யில் கைது செய்​யப்​பட்​டார். சென்னை கிண்​டி, கன்​னி​காபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சங்​கரேஸ்​வரன் (54). அதே பகு​தி​யில் உள்ள தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் ஒன்​றில் தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்து வரு​கிறார். இவர் கடந்த 4-ம் தேதி வழக்​கம்​போல் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார்.

அப்​போது, அவரது உரிமை​யாளர் சண்​முகர் செல்​போனில் தொடர்பு கொண்​டு, நிறு​வனத்​துக்​குள் புகுந்து இரு​வர் தகராறு செய்து கொண்டு இருக்​கின்​றனர். என்ன விவ​காரம் என விசா​ரித்​து, அவர்​களை நிறு​வனத்தை விட்டு வெளியே அனுப்பி வைக்​கும்​படி சங்​கரேஸ்​வரனிடம் தெரி​வித்​துள்​ளார்.

காலி செய்யும்படி மிரட்டல்: அதன்​படி அவர் உள்ளே சென்று பார்த்​த​போது அங்கு நின்​றிருந்த இரு​வர், ‘இந்த நிறு​வனத்தை உடனே காலி செய்ய வேண்​டும். இல்லை என்​றால் நடப்​பதே வேறு’ என தொழிலா​ளர்​களை மிரட்​டிக் கொண்டு இருந்​தனர். அங்கு சென்ற சங்​கரேஸ்​வரன், ‘நிறு​வனத்​தின் உரிமை​யாளர் சண்​முகர் வந்த பிறகு பேசிக்​கொள்​ளுங்​கள்’ என்று கூறி​யுள்​ளார்.

அப்​போது தகராறில் ஈடு​பட்ட இரு​வரில் ஒரு​வர் சங்​கரேஸ்​வரனை தகாத வார்த்​தைகளால் பேசி, ‘துப்​பாக்​கியை காட்​டி, இடத்தை அனை​வரும் காலி செய்​து​விட்டு செல்ல வேண்​டும் இல்​லை​யென்​றால், அனை​வரை​யும் துப்​பாக்​கி​யால் சுட்டு கொலை செய்​து​விடு​வேன்’ என மிரட்​டி​விட்டு அங்​கிருந்து காரில் தப்​பிச் சென்​றுள்​ளனர்.

சங்​கரேஸ்​வரன் இது தொடர்​பாக கிண்டி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், துப்​பாக்​கியை காட்டி மிரட்​டியது ஆந்​தி​ராவைச் சேர்ந்த தொழில​திபர் மதுசூதனன்​ ரெட்டி (62) என்​பதும், அவருடன் வந்​தது அவரது நண்​ப​ரான அதே மாநிலத்​தைச் சேர்ந்த ராமையா என்​பதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த மதுசூதனன் ரெட்​டியை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவரிட​மிருந்து ஒரு துப்​பாக்​கி,6 தோட்​டாக்​கள், துப்​பாக்கி உரிமை ஆவணம் மற்​றும் கார் ஆகிய​வற்றை பறி​முதல் செய்​தனர். தலைமறை​வாக உள்ள அவரது நண்​பரை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர்.

விசா​ரணை​யில், சம்​பந்​தப்​பட்ட ஸ்டீல் நிறு​வனம் வாடகைக்கு செயல்​பட்டு வரு​வதும், அந்த இடத்​தின் உரிமை​யாளரின் உறவின​ரான மதுசூதனன்​ரெட்டி மேற்​படி இடத்​துக்கு சென்​று, நிறு​வனத்தை காலி செய்​யு​மாறு தகராறு செய்​து, சங்​கரேஸ்​வரனை துப்​பாக்​கியை காட்டி மிரட்​டியதும்​ தெரிய​வந்​த​தாக போலீ​ஸார்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x