Published : 02 Jul 2025 06:04 AM
Last Updated : 02 Jul 2025 06:04 AM

சென்னை | வங்​கி​யில் கடன் பெற்று ரூ.21 லட்​சம் மோசடி: 2 ஆண்டு தலைமறை​வாக இருந்த கணவன் - மனைவி கைது

கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை: வங்​கி​யில் கடன் பெற்று ரூ.20 லட்​சத்து 75 ஆயிரம் மோசடி வழக்​கில் தலைமறை​வாக இருந்த கணவன், மனைவி கைது செய்​யப்​பட்​டனர். அம்​பத்​தூர், சூரப்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்​தவர் சுவாமி​தாஸ் பாண்​டியன் (62), இவரது மனைவி மேரி ஜாக்​குலின் (59).

இவர்​கள் இரு​வரும் தனி​யாக தொழில் நிறு​வனம் ஒன்றை தொடங்க பாரத ஸ்டேட் வங்​கி, இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​களில் போலி​யான ஆவணங்​களை கொடுத்து ரூ.20 லட்​சத்து 75 ஆயிரம் கடன் பெற்று கடன் தொகையை வங்​கி​களுக்கு திருப்பி செலுத்​தாமல் ஏமாற்​றி​யுள்​ளனர்.

இது தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட வங்கி நிர்​வாகி​கள் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்​து, மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள வங்கி மோசடி புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர். எழும்​பூர் கூடு​தல் பெருநகர குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இது ஒரு​புறம் இருக்க, கணவன், மனைவி இரு​வரும் வழக்கு விசா​ரணைக்கு ஆஜரா​காமல் தலைமறை​வாகினர். அவர்​கள் இரு​வரை​யும் பிடிக்க நீதி​மன்​றம் பிடி​யாணை பிறப்​பித்​தது. இந்​நிலை​யில், கடந்த 2 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த சுவாமி​தாஸ் பாண்​டியன், அவரது மனைவி மேரி ஜாக்​குலின் ஆகிய இரு​வரை போலீ​ஸார் 2 நாட்​களுக்கு முன்பு கைது செய்​தனர். பின்​னர், அவர்​களை நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x