Last Updated : 01 Jul, 2025 06:30 AM

 

Published : 01 Jul 2025 06:30 AM
Last Updated : 01 Jul 2025 06:30 AM

ரவுடிகளை கண்காணிக்க, குற்ற வழக்குகளில் துப்பு துலக்க சென்னை காவல் துறையில் ஏஐ தொழில்நுட்பம்

சென்னை: ர​வுடிகளை கண்​காணிக்​க​வும், குற்ற வழக்​கு​களில் துப்பு துலக்​க​வும் வெளி​நாடு​களைப் போல் சென்னை போலீ​ஸார் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​தத் தொடங்​கி​யுள்​ளனர். சென்​னை​யில் கொலை, கொள்​ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகை​யான குற்​றச்​செயல்​களை​யும் முற்​றி​லும் கட்​டுப்​படுத்த காவல் துறை பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக, ரவுடிகளுக்கு எதி​ரான நடவடிக்கை முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் படு​கொலைக்கு பிறகு சென்​னை​யில் ரவுடிகள் மற்​றும் குற்​றப் பின்​னணி கொண்​ட​வர்​களுக்கு எதி​ரான நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்​டுள்​ளது.

ரவுடிகள் ஏ, ஏ பிளஸ், சி என 3 ஆக வகைப்​படுத்​தப்​பட்டு கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளனர். அதன்​படி, சென்​னை​யில் சுமார் 3,400 ரவுடிகள் போலீ​ஸாரின் அதிதீ​விர கண்​காணிப்​பில் உள்​ளனர். இவர்​களது பெயர், வயது, முகவரி, குற்றப் பின்​னணி, கூட்​டாளி​கள், எதிர் தரப்​பினர் என அனைத்து தகவல்​களும் தனித்​தனி​யாக வகைப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இவர்​கள் சிறை​யில் உள்​ளார்​களா? வெளியே உள்​ளார்​களா? சொந்த இடத்​திலிருந்து வேறு இடத்​துக்கு இடம் பெயர்ந்​துள்​ளன​ரா? எனவும் தகவல் சேகரிக்கப்படு​கிறது.

இதற்​காக, சென்னை போலீ​ஸார், வெளி​நாடு​களைப் போல் தற்​போது ஏஐ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​தத் தொடங்​கி​யுள்​ளனர். ஒரு ரவுடியை பற்​றிய விவரத்தை நொடிப்​பொழு​தில் அறிந்​து​கொள்ள ஏஐ தொழில்​நுட்​பம் அவர்​களுக்கு கைகொடுக்​கிறது.

சம்​பந்​தப்​பட்ட ரவுடிக்கு ஏற்​கெனவே ஏற்​பட்ட உடல்​நலப் பிரச்​சினை, அதற்கு அவர் எந்​தெந்த மருத்​து​வ​மனை​யில் எந்​தெந்த தேதியில் சிகிச்சை பெற்​றார், எத்​தனை முறை குண்​டர் சட்​டத்​தில் கைதா​னார், எந்​தெந்த சிறை​களில் அடைக்​கப்​பட்​டார், எந்​தெந்த நீதி​மன்​றங்​களில் வழக்கு விசா​ரணை நடை​பெறுகிறது, எத்​தனை முறை ஜாமீன் மற்​றும் பரோலில் வெளியே வந்​துள்​ளார், எத்​தனை குற்​றங்​களில் தண்​டனை பெற்​றுள்​ளார் உட்பட அனைத்து விவரங்​களை​யும் ஏஐ துல்​லிய​மாக தெரி​வித்து விடு​கிறது.

அது மட்​டுமல்​லாமல், ஒரு குறிப்​பிட்ட வணிக வீதி, பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடத்​தில் சம்​பந்​தப்​பட்ட ரவுடி அல்​லது குற்​ற​வாளி உள்​ளா​ரா? என்​ப​தை​யும், எந்​தெந்த நேரத்​தில் எங்​கிருந்​தார் என்​ப​தை​யும் சிசிடிவி கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளை அடிப்​படை​யாக வைத்து ஏஐ தொழில்​நுட்​பம் போலீ​ஸாருக்கு துல்​லிய​மாக காட்​டிக் கொடுத்​து​விடுகிறது. இதே​போல், குற்ற வழக்​கு​களில் துப்பு துலக்​க​வும், வழக்கு விவரங்​களை விரை​வாக தெரிந்​து​கொள்​ள​வும் சென்னை போலீ​ஸார் ஏஐ தொழில் நுட்​பத்தை பயன்​படுத்த ஆரம்​பித்​துள்​ளனர். இது தங்​களுக்கு பெரிய அளவில் உதவி​யாக உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

குற்ற முன்​னறி​விப்​பு, தடுப்பு: எந்​தெந்த பகு​தி​களில் எந்த வகை​யான குற்​றம் எந்த நேரத்​தில் நடை​பெற்​றது போன்ற வரலாற்று குற்​றத் தரவு, மக்​கள் தொகை மற்​றும் சுற்​றுச்​சூழல் காரணி​கள் போன்ற பெரிய தரவுத் தொகுப்​பு​களை ஏஐ பகுப்​பாய்வு செய்து போலீ​ஸாருக்கு முடிவு​களை வழங்​கு​கிறது.

அதை அடிப்​படை​யாக வைத்து எந்த பகு​தி​களில் குற்​றச் செயல்​கள் நடை​பெற வாய்ப்​புள்​ளது, அது​வும் எந்த வகை​யான குற்​றச் செயல்​கள் நடை​பெற வாய்ப்​புள்​ளது என்​பதை போலீ​ஸார் முன்​கூட்​டியே தெரிந்​து​கொள்ள முடிகிறது. அதன் பிறகு, சம்​பந்​தப்​பட்ட இடங்​களில் முன்​னெச்​சரிக்​கை​யாக பாது​காப்பை பலப்​படுத்​தி​யும், கண்​காணிப்பை அதி​கரித்​தும் குற்​றங்​கள் நடப்​ப​தற்கு முன்பே தடுக்க போலீ​ஸாருக்கு ஏஐ கைகொடுத்து வரு​கிறது.

போக்​கு​வரத்து காவலில் ஏஐ: சென்​னை​யில் போக்​கு​வரத்து விதி​மீறல்​களில் ஈடு​படு​பவர்​களை கண்​டறிய​வும், அவர்​களுக்கு அபராதம் விதிக்​க​வும் ஆங்​காங்கே கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. அவற்​றுள் சில கேம​ராக்​களில் ஏஐ தொழில்​நுட்​ப​மும் புகுத்​தப்​பட்​டுள்​ளது.

அவை கார்​களுக்​குள் ஓட்​டுநர்​களைத் துல்​லிய​மாக கண்​காணிக்​கின்​றன. சீட் பெல்ட் அணி​யாமல் உள்​ளன​ரா? செல்​போனில் பேசி​யபடி கார் ஓட்​டு​கின்​றன​ரா? என்​ப​தைக் கண்​டறிந்து புகைப்​படம் எடுத்து கட்​டுப்​பாட்டு அறைக்கு அனுப்​பி​விடு​கின்​றன. அதை அடிப்​படை​யாக வைத்​து போக்​கு​வரத்​து போலீ​ஸார்​ அபராதம்​ வி​திக்​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x