Published : 01 Jul 2025 05:57 AM
Last Updated : 01 Jul 2025 05:57 AM

வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் கடத்தல்: 3 பேர் கைது

சென்னை: சென்னை ஏழுகிணறு பகு​தி​யில் வசிப்​பவர் ஜன்​னத் கனி (53). இவரது கணவர் ஸ்டீபன் தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் ஆலோ​சக​ராகப் பணி​யாற்​றுகிறார். கடந்த 26-ம் தேதி ஸ்டீபன் அவரது மனைவி ஜன்​னத் கனியை தொடர்பு கொண்டு புதுச்சேரியில் இருப்​ப​தாக​வும் அவசர​மாக ரூ.1 லட்​சம் வேண்​டும் எனவும் கேட்​டுள்​ளார்.

போலீஸில் புகார்: இதையடுத்​து, ஜன்​னத்கனி ரூ.1 லட்​சத்தை அவரது கணவருக்கு ஜீபேமூலம் அனுப்பி வைத்​துள்​ளார். இந்​நிலை​யில் வெகு நேர​மாகி​யும் கணவர் வீடு திரும்​பாத​தால் செல்​போனில் அழைத்​தார். ஆனால் செல்​போன் சுவிட்ச்​-ஆஃப் செய்​யப்​பட்​டிருந்​தது. அதிர்ச்சி அடைந்த ஜன்​னத் கனி, கணவரை கண்​டு​பிடித்​துத் தரு​மாறு முத்​தி​யால்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

முதல்​கட்ட விசா​ரணை​யில், பணத்​தக​ராறில் ஸ்டீபனை ஒரு கும்​பல் புதுச்​சேரிக்கு கடத்​திச் சென்​றது தெரிய​வந்​தது. இதையடுத்து ஆள் கடத்​தல் பிரி​வின்​கீழ் வழக்​குப் பதி​யப்​பட்​டது. தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் திரு​வான்​மியூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் (41), புதுச்​சேரியைச் சேர்ந்த சத்​தி​ய​ராஜ் (38), அதே மாநிலத்​தைச் சேர்ந்த முரு​கன் (40) ஆகியோர் கடத்​தலில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்து புதுச்​சேரி விரைந்த தனிப்​படை போலீ​ஸார், ஸ்டீபனை மீட்​டதோடு அவரை கடத்தி பணத்தை பறித்த3 பேரை​யும் கைது செய்​தனர். தலைமறை​வாக உள்ள மேலும் சிலரை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர். கைது செய்​யப்​பட்ட பிரேம் ஆனந்த் ராணுவத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

கடந்த 4 மாதங்​களுக்கு முன்பு பிரேம் ஆனந்​துக்கு ஸ்டீபனின் அறி​முகம் கிடைத்​துள்​ளது. பிரேம் ஆனந்​துக்கு சுங்​கத் துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி ஸ்டீபன் ரூ.4 லட்​சம் பெற்​றுள்​ளார். ஆனால் பேசி​யபடி வேலை வாங்​கிக் கொடுக்​க​வில்​லை. அதற்​காக பெற்ற பணத்​தை​யும் திரும்ப கொடுக்​காமல், தொடர்ந்து ஏமாற்றி வந்​துள்​ளார்.

இதனால் ஆத்​திரமடைந்த பிரேம் ஆனந்த், அவரது நண்​பர்​கள் மூலம் திட்​ட​மிட்டு ஸ்டீபனை புதுச்​சேரிக்கு காரில் கடத்​திச் சென்று பணத்தை கேட்டு மிரட்டி தாக்​கி​யுள்​ளது வி​சா​ரணை​யில் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்​. தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x