Published : 30 Jun 2025 06:36 AM
Last Updated : 30 Jun 2025 06:36 AM

ஆன்​லைன் வர்த்​தகத்​தில் இரட்​டிப்பு லாபம் ஆசை காட்டி தொழிலதிபரிடம் ரூ.2.26 கோடி மோசடி: 4 பேர் கைது

சத்தியநாராயணன், மணிவேல், ரோஷன், சிம்சன் செல்லதுரை.

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகத்​தில் இரட்​டிப்பு லாபம் பெற்​றுத் தரு​வ​தாக தொழில் அதிபரிடம் ரூ.2.26 கோடி மோசடி செய்த கும்​பலைச் சேர்ந்த 4 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்னை தி.நகரில் வசிப்​பவர் தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்​போன் வாட்​ஸ்​-அப் எண்​ணுக்கு அண்​மை​யில் தகவல் ஒன்று வந்​தது. அதில், ‘எங்​களது வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்து நாங்​கள் ஆலோ​சனை கூறும் பங்கு வர்த்​தகத்​தில் முதலீடு செய்​தால் இரட்​டிப்பு லாபம் கிடைக்​கும்’ எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதை உண்​மையென நம்​பிய கிஷோர், அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலை​தளத்​தில் சேரு​வதற்​காக அவருக்கு வந்த வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்​துள்​ளார். பின்​னர் மோசடி நபர்​கள் அனுப்​பிய லிங்க் (Link) மூல​மாக ஆன்​லைன் பங்கு வர்த்தக வலை​தளத்​தில் கிளிக் செய்​து, பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களில் பல பரிவர்த்​தனை​களில் ரூ.2 கோடியே 26 லட்​சம் பணம் அனுப்​பி​யுள்​ளார். ஆனால் அவருக்கு லாப​மும் கிடைக்​க​வில்​லை, முதலீட்டு பணமும் திரும்ப கிடைக்​க​வில்​லை.

இதையடுத்து தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த கிஷோர், இது தொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸாரிடம் புகார் தெரி​வித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக மோசடி கும்​பலின் கூட்​டாளி​கள் திருநெல்​வேலி, தென்​காசி பகு​தி​களில் பதுங்​கி​யிருப்​பது தெரிந்​தது. அங்கு விரைந்த தனிப்​படை போலீ​ஸார் சத்​தி​ய​நா​ராயணன் (60), மணிவேல் (25), ரோஷன் (35) மற்​றும் சிம்​சன் செல்​லதுரை (26) ஆகிய 4 பேரை கைது செய்​தனர்.

மோசடி கும்​பல் தாங்​கள் மோசடி செய்​யும் பணத்தை தற்​போது கைது செய்​யப்​பட்ட 4 பேரின் வங்​கிக் கணக்​குக்கு அனுப்ப வைத்​து, அவர்​கள் மூலம் பணத்தை தங்​களுக்கு அனுப்ப வைத்​துள்​ளனர். இதற்​காக தற்​போது கைது செய்​யப்​பட்ட 4 பேருக்​கும் கமிஷன் கொடுத்​துள்​ளனர். மோசடிக்கு மூளை​யாக உள்ள கும்​பல் வெளி​நாடு​களி​லிருந்து இயங்கி வரு​கிறது. அந்த கும்​பல் குறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

உதவி எண் 1930: பொது​மக்​கள் யாரேனும் இது​போன்று இணை​ய​வழி குற்​றத்​தால் பாதிக்​கப்​பட்​டது தெரிய​வந்​தால் உடனடி​யாக தேசிய இணை​ய​வழி குற்​றத்​தடுப்பு உதவி எண் 1930-க்கு தொடர்​பு​கொண்டு விவரங்​களை தெரிவிக்க வேண்​டும் அல்​லது https.www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தில் புகாரைப் பதிவு செய்ய வேண்​டும் எனக் காவல்​ ஆணை​யர்​ அருண்​ அறி​வுறுத்தியுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x