Published : 30 Jun 2025 05:58 AM
Last Updated : 30 Jun 2025 05:58 AM

சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி வெளி மாநிலத்தில் பதுங்கலா?

திருவள்ளூர்: சிறு​வன் கடத்​தல் வழக்​கில் தலைமறை​வாகி உள்ள புரட்சி பாரதம் கட்சி தலை​வர் பூவை ஜெகன்​மூர்த்தி பிற மாநிலங்​களில் பதுங்​கி​யிருக்​கிறா​ரா? என, சிபிசிஐடி தனிப்​படை​யினர், சைபர் க்ரைம் போலீ​ஸாரின் உதவி​யுடன், தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காடு அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்​பியை கடத்​தி​யது தொடர்​பாக புரட்சி பாரதம் கட்சி தலை​வரும், கே.​வி.குப்​பம் தொகுதி எம்​எல்​ஏவு​மான பூவை ஜெகன் மூர்த்​தி, போலீஸ் ஏடிஜிபி ஜெய​ராம் ஆகியோர் மீது குற்​றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு மீதான விசா​ரணை​யின் போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

பூவை ஜெகன் மூர்த்​திக்கு கண்​டனம் தெரி​வித்​தது. இந்த உத்​தரவை எதிர்த்​து, உச்ச நீதி​மன்​றத்​தில் ஏடிஜிபி ஜெய​ராம் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை விசா​ரித்த நீதி​மன்றம், கைது உத்தரவை ரத்து செய்​தும், பூவை ஜெகன்​மூர்த்​தி​யின் முன்​ஜாமீன் மனுவை வேறு அமர்​வுக்கு மாற்​றி​யும் உத்​தர​விட்​டது. இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி போலீ​ஸாருக்கு மாற்​றப்​பட்​டதையடுத்​து, சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பூவை ஜெகன் மூர்த்​தி​யின் முன்​ஜாமீன் மனுவை கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​து, உத்​தர​விட்​டது. இதனால், சிபிசிஐடி போலீ​ஸார் தன்னை கைது செய்​வார்​கள் என்​ப​தால், பூவை ஜெகன்​மூர்த்​தி, பூந்​தமல்லி அருகே உள்ள ஆண்​டர்​சன்​பேட்​டை​யில் உள்ள தன் வீட்​டில் இருந்து வெளி​யேறி தலைமறை​வாகி​யுள்​ளார். இதையடுத்​து, சிபிசிஐடி காஞ்​சிபுரம் டிஎஸ்பி வேல்​முரு​கன் தலை​மையி​லான 4 தனிப் படை​யினர் பூவை ஜெகன் மூர்த்​தியை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

அவர்​களின் இந்த தேடு​தல் பணி​யில், பூவை ஜெகன் மூர்த்​தி​யின் வீடு பூட்​டப்​பட்​டுள்​ளதும், அவரது குடும்​பத்​தினர் மற்​றும் கார் ஓட்​டுநர், கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​கள், நெருங்​கிய நண்​பர்​களின் மொபைல் போன்​களும் சுவிட்ச் ஆஃப் செய்​யப்​பட்​டுள்​ளதும் தெரிய வந்​துள்​ளது.

ஆகவே, சைபர் க்ரைம் போலீ​ஸாரின் உதவி​யுடன் பூவை ஜெகன்​மூர்த்தி உள்​ளிட்​டோரின் மொபைல் போன் தரவு​களை ஆய்வு செய்து சிபிசிஐடி போலீ​ஸார் பூவை ஜெகன்​மூர்த்​தி, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாடகா உள்​ளிட்ட பிற​மாநிலங்​களில் பதுங்கியிருக்​கிறா​ரா? என்ற கோணத்​தில் விசா​ரித்து அவரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

மேலும், பூவை ஜெகன்​மூர்த்​தி, உச்​சநீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனு​தாக்​கல் செய்​துள்​ளார். அந்த மனு​மீ​தான விசாரணையில், பூவை ஜெகன்​மூர்த்​திக்கு முன் ஜாமீன் அளிக்க சிபிசிஐடி போலீ​ஸார் எதிர்ப்பு தெரி​விப்​பார்​கள் என கூறப்படுகிறது. எனவே, பூவை ஜெகன்​மூர்த்​திக்​கு, உச்​சநீ​தி​மன்​றத்​தி​ல் முன்​ஜாமீன்​ கிடைக்​கு​மா? என்​பது கேள்​விக்​ குறி​யாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x