Published : 30 Jun 2025 05:34 AM
Last Updated : 30 Jun 2025 05:34 AM

தென்காசி | தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் 1 கிலோ நகைகள், ரூ.20 லட்சம் திருட்டு

தென்காசி: தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் அரு​கே​யுள்ள சாலைப்​புதூர் நவநீதகிருஷ்ணபுரத்​தைச் சேர்ந்​தவர் ராஜசேகரன் ​(58). இவர் அடைக்​கலப்​பட்​ட​ணம் பகு​தி​யில் சிபிஎஸ்இ, மெட்​ரி​குலேஷன் பள்​ளி, பி.எட். கல்​லூரி உள்​ளிட்ட கல்வி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். தனது குடும்​பத்​தினருடன் பள்ளி வளாகத்​தில் உள்ள வீட்​டில் வசிக்​கிறார்.

இந்​நிலை​யில், அவர் குடும்​பத்​தினருடன் திருமண நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்​ப​தற்​காக வெளியூர் சென்​றிருந்​தார். நேற்று காலை​யில் அவரது வீட்​டின் கதவு திறந்து கிடந்​தது. வீட்​டில் பீரோ திறக்​கப்​பட்​டு, ஒரு கிலோ தங்க நகைகள் மற்​றும் ரூ.20 லட்​சம் திருடப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

தகவலறிந்த ஆலங்​குளம் போலீ​ஸார் அங்கு சென்​று, ஆய்வு செய்​தனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “திருட்​டில் ஈடு​பட்​டது யார், எவ்​வளவு நகை, பணம் திருடப்​பட்​டது என்று விசா​ரித்து வரு​கிறோம். மேலும், தனிப்​படைகள் அமைத்​து, திருடர்​களைத் தேடி வரு​கிறோம்​” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x