Published : 21 Jun 2025 05:49 AM
Last Updated : 21 Jun 2025 05:49 AM

அரூர் | சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் கைது

அரூர்: பொம்​மிடி அருகே பள்ளி சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்​டிய கல்​லூரி மாணவர் உள்​ளிட்ட 3 பேரை போக்சோ சட்​டத்​தின் கீழ் போலீ​ஸார் கைது செய்​தனர். தரு​மபுரி மாவட்​டம் பாப்​பிரெட்​டிப்​பட்டி அடுத்த சுங்​கர அள்​ளியைச் சேர்ந்த ஓட்​டுநர் சரவணன் (22), கெட்​டூர் பகு​தி​யைச் சேர்ந்த கல்​லூரி மாணவர் செந்​தமிழ் (19) ஆகிய இரு​வரும், 17 வயதுடைய 2 பள்ளி சிறுமிகளை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி அவர்​களு​டன் இன்​ஸ்​டாகி​ராமில் பழகி​யுள்​ளனர்.

பின்​னர் ஆசை வார்த்தை கூறி, சிறுமிகளிடம் ஆன்​லைன் மூலம் வீடியோ காலில் பேசி​யபடியே, அவர்​களை ஆபாச​மாக பதிவு செய்​துள்​ளனர். அந்த படங்​களை பெத்​தானூரைச் சேர்ந்த ஓட்​டுநர் வெங்​கடேஷ் (24) என்​பவருக்கு அனுப்பி உள்​ளனர். பின்​னர் ஒருஇடத்​தைக் குறிப்​பிட்​டு, அந்த சிறுமிகளிடம், “உங்​களின் ஆபாச படம் இருக்​கிறது. நீங்​கள் உடனே அங்கு வரவேண்​டும். இல்​லை​யெனில் சமூக வலை​தளத்​தில் பரப்பி விடு​வோம்’ என மிரட்​டி​யுள்​ளனர். பின்​னர், வாட்​ஸ்​அப் குரூப்​பில் சிறுமிகளின் ஆபாச படத்தை வெளி​யிட்​டுள்​ளனர்.

இதுகுறித்து சிறுமிகள் தரப்பில் அளித்த புகாரின்​பேரில் பொம்மிடி போலீ​ஸார் போக்சோ சட்​டத்தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து சரவணன், செந்​தமிழ், வெங்​கடேஷ் ஆகி யோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x