Published : 10 Jun 2025 04:24 AM
Last Updated : 10 Jun 2025 04:24 AM

தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் அதிர்ச்சி சம்பவம்: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; காவலாளி கைது

கைது செய்யப்பட்ட காவலாளி. | படம்:எம்.முத்துகணேஷ் |

தாம்பரம்: ​தாம்​பரம் சானடோரி​யம் பகு​தி​யில் உள்ள அரசு சேவை இல்​லத்​தில் தங்​கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த அரசு சேவை மைய காவலா​ளியை போக்சோ சட்டத்தில் போலீ​ஸார் கைது செய்​தனர். தாம்​பரம் சானடோரி​யம் ஜட்ஜ் காலனி பகு​தி​யில் தமிழக அரசின் சமூக நலத்​துறை சார்​பாக அரசு சேவை இல்​லம் செயல்​பட்டு வரு​கிறது.

இதில் தமிழ்​நாடு முழு​வதும் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து 128 மாணவி​கள் தங்கி கல்​லூரி​கள், பள்​ளி​களில் பயின்று வரு​கின்​றனர், இந்​நிலை​யில், கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்​களுக்கு முன்பு அரசு சேவை இல்​லத்​தில் சேர்ந்து குரோம்​பேட்​டை​யில் உள்ள அரசு மகளிர் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு சேர்ந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 8-ம் தேதி அதி​காலை சேவை இல்​லத்​தில் இருந்து எழுந்து வரும்​போது மர்ம நபர் மாணவி முகத்​தில் கைவைத்து அழுத்தி மயக்​கம் அடைய செய்து பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதில் முகம் மற்​றும் கால்​களில் பலத்த காயம் ஏற்​பட்​ட தோடு கால் எலும்பு முறிவு ஏற்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. அந்த மாணவி வலி தாங்க முடி​யாமல் சத்​தம் போட்​ட​தால் அங்​கிருந்து மர்ம நபர் தப்​பிச் சென்​றுள்​ளார். அப்​போது, அரு​கில் இருந்த மாணவி​கள் மற்​றும் பாது​காவலர்​கள் அவரை மீட்டு தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்ட நிலை​யில் மேல் சிகிச்​சைக்​காக ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு அவர் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளார். சிட்​ல​பாக்​கம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் சிட்​ல​பாக்​கம் பெரி​யார் நகர் பகு​தியை சேர்ந்த அரசு சேவை மைய காவலாளி மேத்யூ (49) என்​பவர்​தான் பாலியல் தொல்லை கொடுத்​தவர் என்​பது தெரிய​வந்​தது. இதனைத் தொடர்ந்து போக்சோவில் அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அமைச்சர் தகவல்: இதுகுறித்​து, அமைச்​சர் கீதா ஜீவன் கூறும் போது, ”குழந்தையின் தாயாரை சந்​தித்​தும் பேசி​யுள்ளேன். அந்த இல்​லத்​தில் 8 சிசிடிவி கேமரா பதிவு மூலம் அங்​குள்ள மேத்யூ என்ற காவலரை காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ளனர். அடுத்​தகட்​ட​மாக, உடனடி​யாக, 3 பெண் காவலர்​களை அங்கு நியமிக்க ஆட்​சி​யரிடம் அறி​வுறுத்​தி​யுள்​ளோம். அங்​குள்ள மாணவி​களிடம் நாங்​கள் விசா​ரித்​த​தில், அந்த காவலர் நல்​ல​வர், எங்​கள் தந்தை மாதிரி என்​று​தான் கூறுகின்​றனர். பாதிக்​கப்​பட்ட மாண​வி​யும் 5 நாட்​கள் முன்​பு​தான் இங்கு வந்​துள்​ளார்.

கூடு​தலாக அந்த வளாகத்​தில் சிசிடிவி வைக்​க​வும் நடவடிக்கை எடுத்​துள்​ளோம். பாது​காப்​பான இடம் தான். இனி பெண்​களுக்​கான எல்லா இல்​லங்​களி​லும், குறிப்​பாக அன்னை சத்​தியா இல்​லம் மற்​றும் இது போன்ற சேவை இல்​லங்​களில், தொண்டு நிறு​வனங்​கள் நடத்​தும் இல்​லங்​களி​லும் இனி பெண் காவலர் மட்​டுமே நியமிக்க வேண்​டும் என்று முடி​வெடுத்​துள்​ளோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

தலைவர்கள் கண்டனம்: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வில், ‘அரசு சேவை இல்​லத்​திலேயே மாணவிக்கு பாது​காப்பு இல்லை என்​பது இந்த அரசு முற்​றி​லும் செயலிழந்து நிற்​ப​தையே உணர்த்​துகிறது. இதற்கு முதல்​வர் வெட்​கித் தலைகுனிய வேண்​டும். தமிழகம் டெல்​லிக்கு அவுட் ஆப் கண்ட்​ரோலாக இருப்​ப​தாகயாரோ எழு​திக் கொடுத்த டயலாக்கை பேசும் முதல்​வரே, உங்​கள் ஆட்​சி​யில் அவுட் ஆப் கண்ட்​ரோலாக இருக்​கும் பாலியல் ‘சார்​’களை எப்​போது கண்ட்​ரோல் செய்​யப் போகிறீர்​கள்’ என தெரி​வித்​துள்​ளார்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, ‘தமிழகம் முழு​வது​மே, பெண்​களுக்கு எதி​ரான பாலியல் தாக்​குதல் வழக்​கு​கள், திமுக அரசால் பொறுப்​பின்றி கையாளப்​படு​வதன் விளைவு, சமூக விரோ​தி​களுக்கு சட்​டத்​தின் மீதும், காவல்​துறை​யின் மீதும் சிறிதும் பயமில்​லாமல் போய்​விட்​டது. குற்​றம் நடை​பெற்ற பிறகு, குற்​ற​வாளியை பிடித்து விட்​டோம் என்று பெருமை பேசிக் கொண்​டிருக்​கும் திமுக அரசு, குற்​றம் நடக்​காமல் தடுப்​பது​தான் அரசின் முதல் கடமை என்​ப​தை மறந்து போய்விட்டது என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x