Published : 04 Jun 2025 01:42 PM
Last Updated : 04 Jun 2025 01:42 PM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த இரட்டை கொலையில் சிறுவன் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஆனந்த் மகன் பிரகதீஸ்வரன் (20). இவர் கடந்த 1-ம் தேதி இரவு கடலையூர் சாலையில் நின்றிருந்தார். அப்போது கோவில்பட்டி புதுக்கிராமம் செண்பகா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் மாதவன் (26) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, பிரகதீஸ்வரனிடம் தகராறு செய்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்கினர். இதில் பிரகதீஸ்வரன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்த அரை மணி நேரத்துக்குள் சதீஷ் மாதவன் வீட்டுக்கு சென்ற ஒரு கும்பல், அவரது தாய் கஸ்தூரியை (46) கத்தியால் குத்தி கொலை செய்தனர். கஸ்தூரியின் சகோதரர் செண்பகராஜ் (44) என்பவரும் தாக்கப்பட்டார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
பிரகதீஸ்வரனை கொலை செய்த வழக்கில் சதீஷ் மாதவன் (26), சிந்தாமணி நகரைச் சேர்ந்த செல்லத்துரை (26), வ.உ.சி. நகரைச் சேர்ந்த விக்னேஷ் (24), புதுக்கிராமம் முகமது சாலி ஹாபுரத்தைச் சேர்ந்த மதன்குமார் (20), வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கனக ராஜ் (24), செண்பக வல்லி நகரைச் சேர்ந்த அர்ஜூன் (24), சிந்தாமணி நகரைச் சேர்ந்த சுரேஷ் (24) மற்றும் புதுக்கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என 8 பேரை கைது செய்தனர்.
6 பேர் கைது
மேலும், கஸ்தூரி கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மறவர் காலனியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (20), வள்ளுவர் நகரைச் சேர்ந்த சரவணன் (20), நாகராஜன் (20), சண்முகநகரைச் சேர்ந்த பாலமுருகன் (19), முகமது சாலிஹாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பாலமுருகன் (21), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படர்ந்தாளைச் சேர்ந்த தங்கப் பாண்டி (21) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT