Published : 02 Jun 2025 06:43 PM
Last Updated : 02 Jun 2025 06:43 PM
ராமேசுவரம்: தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 314-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ரவிந்திரன் (25) அவரது மனைவி அம்பிகா (25) மகன் அத்ரியன் (03) ஆகிய 3 பேர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் தப்பிச்சென்ற போது தலைமன்னார் அருகே படகோட்டியுடன் அந்நாட்டு கடற்படையினர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, மண்டபம் முகாமில் தங்கியிருந்த அகதிகளுக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல உதவியவர்கள் குறித்தும், மண்டபம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT