Published : 02 Jun 2025 06:59 AM
Last Updated : 02 Jun 2025 06:59 AM

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் அரியலூரில் டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

அரியலூர்: தனி​யார் நிதி நிறுவன ஊழியர்​கள் திட்​டிய​தால் டிராவல்ஸ் உரிமை​யாளர் தற்​கொலை செய்​து​ கொண்​டது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். அரியலூர் மாவட்​டம் உடை​யார்​பாளை​யத்தை அடுத்த தத்​தனூர் நடு​வெளி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ந.மணி​கண்​டன்​(33). டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வந்​தார். இவருக்கு மனை​வி, இரு குழந்​தைகள் உள்​ளனர். கடந்த ஆண்டு அரியலூரில் உள்ள தனி​யார் நிதி நிறு​வனத்​தில் மணி​கண்​டன் ரூ.12 லட்​சம் கடன் பெற்​றுள்​ளார்.

மாதந்​தோறும் தவணைத் தொகை கட்டி வந்த நிலை​யில், கடந்த 3 மாதங்​களாக தவணைத் தொகையை கட்​ட​வில்லை என்று தெரி​கிறது. இதனால், மணி​கண்​டன் வீட்​டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்​கள் இரு​வர், பணத்தை செலுத்​து​மாறு கட்​டாயப்​படுத்​தி, தகாத வார்த்​தைகளால் திட்​டி​னார்​களாம். இதனால் மனமுடைந்த நிலை​யில் இருந்த மணி​கண்​டன் கடந்த 25-ம் தேதி விஷம் அருந்தி தற்​கொலைக்கு முயன்​றார்.

அவரை மீட்ட குடும்​பத்​தார், ஜெயங்​கொண்​டத்​தில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு மணி​கண்​டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்​தினம் உயி​ரிழந்​தார். இதுகுறித்து உடை​யார்​பாளை​யம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர்.

தனி​நபர், சுயஉதவிக் குழுக்​கள் பெற்ற கடனை வலுக்​கட்​டாய​மாக வசூலித்​தால் 5 ஆண்​டு​கால சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 லட்​சம் அபராதம் விதிக்க வகை செய்​யும் மசோதா தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஏப்​.29-ம் தேதி நிறைவேற்​றப்​பட்ட நிலை​யில், தனி​யார் நிதி நிறுவன ஊழியர்​கள் திட்​டிய​தால் மணி​கண்​டன் தற்​கொலை செய்து கொண்​டது அரியலூரில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதற்​குக் காரண​மானவர்​கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கள்​
கோரிக்​கை விடு​த்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x