Published : 29 May 2025 06:16 AM
Last Updated : 29 May 2025 06:16 AM

இந்தியப் பெருங்கடல் பகுதியில் 600 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 600 கிலோ ஐஸ் போதைப் பொருள் பண்டல்கள்.

ராமேசுவரம்: இந்​தி​யப் பெருங்​கடலில் 2 ஆழ்​கடல் மீன்​பிடி படகு​களில் கடத்​தப்​பட்ட 600 கிலோ ஐஸ் போதைப்​பொருட்​களை இலங்கை கடற்​படை​யினர் பறி​முதல் செய்து அந்​நாட்டைச் சேர்ந்த 11 பேரை கைது செய்​துள்​ளனர். செயற்​கைக்​கோள் தொழில்​நுட்​பத்தைப் பயன்​படுத்தி, சர்​வ​தேச கடற்​பகு​தி​யில் போதைப் பொருட்​களை ஏற்​றிச் செல்​லும் படகு​கள் மற்​றும் கப்​பல்​கள் பற்​றிய தேடு​தல் நடவடிக்​கைகளை இலங்கை கடற்​படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு: இந்நிலையில், நேற்று முன்​தினம் (புதன்​) இலங்​கை​யின் தெற்கு பகு​தி​யிலுள்ள திக்​கோ​விட்​ட​வில் இருந்து 100 கடல் மைல் தொலை​வில் இந்​தி​யப் பெருங்​கடலில் சந்​தேகத்​துக்​குரிய முறை​யில் பயணித்த 2 ஆழ்​கடல் மீன்​பிடி படகுகளை இலங்கை கடற்​படை​யினர் கண்​டறிந்து ரோந்து கப்​பலில் சென்று சுற்றி வளைத்​தனர்.

கடற்​படை​யினரின் சோதனை​யில் 2 படகு​களில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த 600 கிலோ ஐஸ் போதைப்​பொருள்கள் கண்​டறியப்​பட்டு பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும் 2 படகு​களி​லிருந்த இலங்​கையைச் சேர்ந்த 11 பேரை கடற்​படை​யினர் கைது செய்​தனர். பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப்​பொருட்​களும், படகு​களும் நேற்று (வி​யாழன்)
திக்​கோ​விட்ட கடற்​படை முகா​முக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.

இலங்கை கடற்படை விசாரணை: மேலும் இந்த போதைப்​பொருட்​கள் எங்​கிருந்து கடத்தி வரப்​பட்​டன, கடத்​தலில் தொடர்​புடைய​வர்​கள் யார்? என்பது குறித்து இலங்கை கடற்​படை​யினர் வி​சா​ரித்து வரு​கின்​றனர்​.இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 600 கிலோ ஐஸ் போதைப் பொருள் பண்டல்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x