Published : 29 May 2025 06:16 AM
Last Updated : 29 May 2025 06:16 AM
ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் 2 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் கடத்தப்பட்ட 600 கிலோ ஐஸ் போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர். செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்வதேச கடற்பகுதியில் போதைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றிய தேடுதல் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு: இந்நிலையில், நேற்று முன்தினம் (புதன்) இலங்கையின் தெற்கு பகுதியிலுள்ள திக்கோவிட்டவில் இருந்து 100 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்துக்குரிய முறையில் பயணித்த 2 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கண்டறிந்து ரோந்து கப்பலில் சென்று சுற்றி வளைத்தனர்.
கடற்படையினரின் சோதனையில் 2 படகுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ஐஸ் போதைப்பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 படகுகளிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும், படகுகளும் நேற்று (வியாழன்)
திக்கோவிட்ட கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இலங்கை கடற்படை விசாரணை: மேலும் இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 600 கிலோ ஐஸ் போதைப் பொருள் பண்டல்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT