Last Updated : 23 May, 2025 07:38 AM

 

Published : 23 May 2025 07:38 AM
Last Updated : 23 May 2025 07:38 AM

ரூ.15 ஆயிரத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட ஆந்திர மாநில சிறுவன் மர்​மமான முறையில் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை

காஞ்​சிபுரம் பாலாற்​றில் புதைக்​கப்​பட்ட சிறு​வனின் சடலத்தை தோண்​டி​எடுத்​து, விசா​ரணை நடத்​தும் ஆந்​திர மாநில போலீஸார்.

காஞ்​சிபுரம்: ரூ.15 ஆயிரத்​துக்கு அடமானம் வைக்​கப்​பட்ட சிறு​வன் மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​தான். சிறு​வனின் சடலம் பெற்​றோருக்​குத் தெரி​யாமல் புதைக்​கப்​பட்​ட​தால், சடலத்தை தோண்​டி​யெடுத்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

ஆந்​திர மாநிலம் கூடூர் பகு​தியை சேர்ந்த பிர​காஷ் ஏனா​தி-அங்​கம்​மாள் தம்​ப​தி, சத்​தி​ய​வேடு பகு​தியைசேர்ந்த முத்​து-தன​பாக்​கி​யம் தம்​ப​தி​யிடம் ரூ.15 ஆயிரம் கடன் பெற்​றனர். கடனுக்கு அடமான​மாக தங்​களது 9 வயது மகன் வெங்​கடேஷை, 10 மாதத்​துக்கு வாத்து மேய்க்​கும் பணிக்​காக அவர்​களு​டன் அனுப்​பி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், முத்​து-தன​பாக்​கி​யம் தம்​ப​தி, காஞ்​சிபுரம் அடுத்த வெம்​பாக்​கம் பகு​தி​யில் தங்​கி, வாத்து மேய்த்து வந்​தனர். கடந்த 30 நாட்​களுக்கு முன்​னர் வெங்​கடேஷுக்கு மஞ்​சள் காமாலை பாதிப்பு ஏற்​பட்​டது.தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட வெங்​கடேஷ், சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தான். இதனால் ஏதேனும் பிரச்​சினை ஏற்​படக் கூடும்என்று கருதி முத்​து-தன​பாக்​கி​யம்தம்​ப​தி, தங்​கள் மகன் ராஜசேகருடன் சேர்ந்​து, காஞ்​சிபுரம் பாலாற்​றில் குழி தோண்​டி, வெங்​கடேஷ் சடலத்​தைப் புதைத்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், 10 மாதங்​கள் முடிந்​ததைத் தொடர்ந்​து, சிறு​வனைத் தேடி அவனது பெற்​றோர் வந்​துள்​ளனர். ஆனால், தங்​களுக்கு சேர வேண்​டிய பணத்​தைக் கொடுக்​கும்​படி முத்​து-தன​பாக்​கி​யம் தம்​பதி கூறி​யுள்​ளனர். மேலும், சிறு​வன் எங்​கிருக்​கிறான் என்​றும் கூற​வில்​லை. இதனால் சந்​தேகமடைந்த சிறு​வனின் பெற்​றோர், ஆந்​திர மாநிலம் சத்​தி​ய​வேடு காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். புகாரின் அடிப்​படை​யில் முத்​து, தனபாக்​கி​யம் மற்​றும் ராஜசேகரிடம் ஆந்​திர மாநில போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அப்​போது, சிறு​வன் உடல்​நிலை சரி​யில்​லாமல் இறந்​த​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்​து, புத்​தூர் டிஎஸ்பி ரவிக்​கு​மார் தலை​மையி​லான போலீ​ஸார், காஞ்​சிபுரம் தாலுகா போலீ​ஸார் உதவி​யுடன், பாலாற்​றில் புதைக்​கப்​பட்ட சிறு​வனின் சடலத்தை தோண்​டி​யெடுத்​தனர். பின்​னர் சிறு​வன் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x