Published : 20 May 2025 04:42 AM
Last Updated : 20 May 2025 04:42 AM

சர்க்கஸ் கூடாரத்தில் ஒட்டகத்தை திருடியது யார்? - சிசிடிவி காட்சிகளை கொண்டு தஞ்சை போலீஸார் விசாரணை

தஞ்சாவூரில் சர்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடுபோன ஒட்டகம்.

தஞ்சாவூர்: சர்க்​கஸ் கூடாரத்​தில் இருந்த ஒட்​டகத்தை திருடியது யார் என்​று, சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளைக் கொண்டு தஞ்​சாவூர் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். 1990-களுக்கு முன்பு வரை சர்க்​கஸ் நிகழ்ச்​சிகளில் சிங்​கம், புலி, யானை, கொரில்​லா, கரடி என பல்​வேறு வகை​யான வன விலங்​கு​கள் பயன்​படுத்​தப்​பட்டு வந்​தன. இவற்​றைப் பார்ப்​ப​தற்​காகவே மக்​கள் குடும்​பத்​துடன் சர்க்​கஸ் நிகழ்ச்​சிகளுக்கு வரு​வார்​கள். சர்க்​கஸ் என்​றாலே திரு​விழா​போல மக்​கள் கூட்​டம் நிரம்பி வழியும்.

பின்​னர் விலங்​கு​கள் துன்​புறுத்​தப்​படு​வ​தாக புகார்​கள் எழுந்​த​தால், நாடு முழு​வதும் சர்க்​கஸ் போன்ற நிகழ்ச்​சிகளில் வன விலங்​கு​கள் பயன்​படுத்த தடை​வி​திக்​கப்​பட்​டது. இதனால் மக்​களுக்கு சர்க்​கஸ் நிகழ்ச்​சிகளுக்​குச் செல்​லும் ஆர்​வம் குறைந்​து, அவற்றுக்கு போதிய வரவேற்பு இல்​லாத நிலை ஏற்​பட்​டது.

இதனால் வரு​மானம் குறைந்​து, பல முன்​னணி சர்க்​கஸ் நிறு​வனங்​கள் கூட மூடப்​பட்​டன. தற்​போது செயல்​பட்டு வரும் சில சர்க்​கஸ் நிறு​வனங்​களி​லும் ஒட்​டகம், குதிரை, கிளி போன்​றவை மட்​டுமே பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், தஞ்​சாவூரில் முகாமிட்​டுள்ள ஒரு சர்க்​கஸ் நிறு​வனத்​தில் இருந்த ஒட்​டகம் திருடு போன சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

கரூர் மாவட்​டம் வேட்​டமலிக்​களம் நத்​தமேடு பகு​தியை சேர்ந்​தவர் விஜய் (25). இவர் தனது குடும்​பத்​தினருடன் ஊர் ஊராகச் சென்று சர்க்​கஸ் நடத்​து​வது வழக்​கம். அதன்​படி, தற்​போது தஞ்​சாவூர் கீழ வஸ்​தா​சாவடி பகு​தி​யில் கூடாரம் அமைத்து சர்க்​கஸ் நடத்தி வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 15-ம் தேதி இரவு சர்க்​கஸ் காட்சி முடிந்த பின், விஜய் தனது குடும்​பத்​தினருடன் அங்கு தூங்​கிக் கொண்​டிருந்​தார். மறு​நாள் காலை எழுந்து பார்த்​த​போது கூடாரத்​தில் கட்டி வைக்​கப்​பட்​டிருந்த ஒட்​டகத்​தைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த விஜய் பல்​வேறு இடங்​களில் ஒட்​டகத்தை தேடிப் பார்த்​தும், கிடைக்​க​வில்​லை. இதுகுறித்து தஞ்​சாவூர் தாலுகா போலீ​ஸில் விஜய் புகார் செய்​தார். இதன்​பேரில், உதவி ஆய்​வாளர் முத்​துக்​கு​மார் மற்​றும் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி காட்​சிப் பதிவு​களை ஆய்வு செய்​தனர்.

இதில், தஞ்​சாவூர் ஞானம் நகர் பகு​தி​யில் உள்ள கண்​காணிப்​புக் கேமராவில், ஒட்​டகத்தை ஒரு​வர் ஓட்​டிச் செல்​லும் காட்சி பதி​வாகி​உள்​ளது. அந்த நபர் யார்? எதற்​காக ஒட்​டகத்தை திருடிச்​ சென்​றார்​ என்​று போலீஸார் வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x