Published : 18 May 2025 02:11 AM
Last Updated : 18 May 2025 02:11 AM

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு: பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உடல்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கார் பாய்ந்து விபத்துக்குள்ளான கிணற்றில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேரை பொக்லைன் இயந்திர உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

​சாத்​தான்​குளம் அருகே கிணற்​றுக்​குள் கார் பாய்ந்து விபத்​துக்​குள்​ளான​தில் குழந்தை உட்பட 5 பேர் தண்​ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளம் அரு​கே​யுள்ள வெள்​ளாளன்​விளை​யில் தூய பரிசுத்த ஆலய பிர​திஷ்டை விழா நடை​பெற உள்​ளது. இதற்​காக, கோயம்​புத்​தூரில் இருந்து சைனி கிரு​பாகரன் உள்​ளிட்ட 8 பேர் நேற்று காலை ஆம்னி காரில் புறப்​பட்டு வந்தனர்.

காரை மோசஸ் (50) என்​பவர் ஓட்​டி​னார். இந்​நிலை​யில், நேற்று மாலை 4 மணி​யள​வில் சாத்​தான்​குளம் அருகே சிந்​தாமணிக்​கும், மீரான்​குளத்​துக்​கும் இடையே கார் சென்று கொண்​டிருந்​தது. அப்​போது, திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார், சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்​புச்​சுவர் இல்​லாத கிணற்​றுக்​குள் பாய்ந்​தது.

காரில் இருந்த சைனி கிரு​பா(26), ஜெரினியா எஸ்​தர்​(23) ஆகிய 2 பேரும் சுதா​ரித்​துக் கொண்​டு, காரின் கதவைத் திறந்து வெளியே குதித்து தப்​பினர். காரில் இருந்த மோசஸ் (50), அவரது மனைவி வசந்தா (49), அவரது மகன் ஹெர்​சோம் (29), ஜெய​பால் மகன் ரவி கோவில்​பிச்சை (45), அவரது மனைவி லெட்​ரியா கிரு​பா(40), ஹெர்​சோமின் ஒன்​றரை வயது குழந்தை ஸ்டா​லின் ஆகிய 6 பேரும் காருடன் கிணற்​றுக்​குள் மூழ்​கினர்.

கார் கிணற்​றுக்​குள் பாய்ந்​ததை பார்த்த கிராம மக்​கள் உடனடி​யாக தீயணைப்​புத் துறைக்கு தகவல் தெரி​வித்​தனர். தண்​ணீரில் தத்​தளித்​துக் கொண்​டிருந்த ஹெர்​சோமை கிராம மக்​கள் மீட்​டனர்.

தகவல் அறிந்து சாத்​தான்​குளம், நாங்​குநேரி தீயணைப்பு நிலைய வீரர்​கள் விரைந்து வந்​து, கிணற்​றுக்​குள் மூழ்​கிய​வர்​களை தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்​டது என்​ப​தால், 2 மணி நேரத்​துக்கு மேலாக தேடி​யும் யாரை​யும் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை.

5 பேர் உடல்கள் மீட்பு: இதையடுத்​து, பொக்​லைன் இயந்​திரங்​களை வரவழைத்து தேடும் பணி நடந்​தது. இந்நிலையில், பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, கிணற்றில் மூழ்கிய குழந்தை உள்ளிட்ட 5 பேரின் உடல்களும் நேற்று இரவு மீட்கப்பட்டன. விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x