Published : 16 May 2025 06:16 AM
Last Updated : 16 May 2025 06:16 AM

சென்னை | ஓய்​வு​பெற்ற ஐ.டி. நிறுவன அதி​காரி வீட்​டில் 60 பவுன் நகை திருட்டு

சென்னை: ஓய்​வு​பெற்ற ஐ.டி. நிறுவன அதி​காரி வீட்​டில் 60 பவுன் நகை திருடப்​பட்​டுள்​ளது. வேலை செய்த வீட்​டிலேயே கைவரிசை காட்டி தப்​பிய நேபாள தம்​ப​தியை தனிப்​படை அமைத்து நீலாங்​கரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். சென்னை கொட்​டி​வாக்​கம், லட்​சுமண பெரு​மாள் 3-வது குறுக்கு தெரு​வைச் சேர்ந்​தவர் மகேஷ் குமார் (60). ஐ.டி. நிறு​வனம் ஒன்​றில் அதி​காரி​யாக பணி​யாற்றி அண்​மை​யில் ஓய்வு பெற்​றார். இவரது மனைவி அலமேலு. இவர்​களுக்கு 2 பெண் பிள்​ளை​கள்; இரு​வருக்​கும் திருமணமாகிவிட்டது.

மூத்த மகளின் தோழி மூலம் நேபாளத்​தைச் சேர்ந்த ரமேஷ் (25) என்​பவர் காவலா​ளி​யாக​வும், அவரது மனைவி பினிதா (23) வீட்டு பணிப் பெண்​ணாக​வும் கடந்த ஒரு மாதத்​துக்கு முன் மகேஷ் குமார் வீட்​டில் வேலைக்கு சேர்ந்​துள்​ளனர். ஓர் ஆண் குழந்தை உள்ள இந்த நேபாள தம்​ப​தி​யை, வீட்​டின் பின்​பக்​கம் உள்ள அறை​யில் தங்​க​வைத்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், வீட்​டைப் பூட்​டி​விட்டு மகேஷ் குமார் தன் மனை​வி​யுடன் காவேரிப்​பாக்​கத்​தில் உள்ள குலதெய்​வம் கோயிலுக்கு சென்​று​விட்டு நேற்று முன்​தினம் இரவு வீடு திரும்​பி​னார். அப்​போது வீட்​டின் பின்​பக்க கதவு உடைக்​கப்​பட்டு உள்ளே இருந்த 60 பவுன் தங்க, வைர நகைகள் திருடப்​பட்​டிருந்​தது. வீட்​டில் வேலை செய்து வந்த நேபாள தம்​ப​தி​யை​யும் காண​வில்​லை.

அதிர்ச்சி அடைந்த மகேஷ் குமார், இது தொடர்​பாக நீலாங்​கரை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வேலை செய்த வீட்​டிலேயே திருடி​விட்டு தப்​பிய நேபாள தம்​ப​தியை தனிப்​படை அமைத்​து தேடி வருகின்றனர்.

நகைக்கடையில் 60 பவுன் திருட்டு: சைதாப்பேட்டை பஜார் சாலையில் நகைக் கடை நடத்தி வருபவர் சுந்தர். வீடு, கடை என இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் என்ற நபரை நகைக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதன் பிறகு வேலையை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ரோகித் கடந்த 7 தேதி மீண்டும் சென்னை வந்து பணிக்கு சேர்ந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நகைகளை சோதித்து பார்த்த போது கடையிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த சுந்தர், ஊழியர் ரோகித்தை தேடியபோது அவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையுடன் மாயமான நகைக்கடை ஊழியர் ரோகித்தை தேடி வருகின்றனர். சென்னையில் அடுத்தடுத்து 60 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப் பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x