Published : 12 May 2025 06:34 AM
Last Updated : 12 May 2025 06:34 AM

சென்னை | மாஞ்சா நூலில் காற்றாடி பறக்க விட்ட சிறுவன் மீது வழக்கு பதிவு

சென்னை: கொடுங்கையூரில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்ட 16 வயது சிறுவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவதால் உயிரிழப்பு போன்ற விபத்துகளை ஏற்படுகின்றன. அதனால் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாஞ்சா நூல் தயாரிப்பது, விற்பது மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீஸார் கண்காணித்து வந்தனர். கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து காற்றாடி பறக்க விட்ட 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுவன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரிடமிருந்து 3 காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x