Published : 26 Apr 2025 05:36 AM
Last Updated : 26 Apr 2025 05:36 AM

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்

திருச்சி: இலங்கையில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோ போனிக்ஸ் எனப்படும் உயர் ரக கஞ்சாவை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், இலங்கையில் இருந்து திருச்சிக்கு நேற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, பயணி ஒருவர் தனது உடைமையில் ரூ.10 கோடி மதிப்பிலான, 9.9 கிலோ எடையுள்ள ஹைட்ரோ போனிக்ஸ் எனப்படும் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் சாஜன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x