Published : 26 Apr 2025 05:31 AM
Last Updated : 26 Apr 2025 05:31 AM

மணல் கடத்தியவருடன் பேரம் பேசியதாக புகார்: உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மீது நடவடிக்கை

பிரதீப்​

கள்ளக்குறிச்சி: மணல் கடத்தியவருடன் பேரம் பேசியதாக புகார் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மீது நடவடிக்கை கள்ளக்குறிச்சி மணல் கடத்​தி​ய​வருடன் பேரம் பேசி​ய​தாக எழுந்த புகாரின் அடிப்​படை​யில், உளுந்​தூர்​பேட்டை டிஎஸ்பி காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளார்.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்டை காவல் உட்​கோட்​டப் பகு​தி​யில் உள்ள எலவ​னாசூர்​கோட்​டை, எடைக்​கல், திரு​நாவலூர், களமருதூர், எறையூர், சேந்​த​நாடு உள்​ளிட்ட பகு​தி​களில் அதிக லாரி மற்​றும் டிராக்​டர்​கள் மூலம் ஆற்று மணல் கடத்​தப்​படு​வ​தாகப் புகார்​கள் எழுந்​தன.

அதே​போல, இப்​பகு​தி​யில் சட்ட விரோத​மாக கூழாங்​கற்​கள், வண்​டல் மண் உள்​ளிட்​ட​வை​யும் இரவு நேரங்​களில் அள்​ளப்​பட்​டு, கடத்​தப்​பட்டு வந்​தது. இது தொடர்​பாக சமூக ஆர்​வலர்​கள் மாவட்ட நிர்​வாகத்​துக்கு பல்​வேறு புகார் அளித்​தும், காவல் துறை நடவடிக்கை எடுக்​க​வில்லை என்​றும் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.

இந்​நிலை​யில் “உளுந்​தூர்​பேட்டை பகு​தி​யில் ஒரு நாளைக்கு மணல் அள்ள வேண்​டுமென்​றால் ஒரு லாரி மணல் அள்ள எனக்கு ரூ.5 ஆயிரம், உனக்கு ரூ.1,000 கொடுக்க வேண்​டும். ஒரு நடை என்று கூறி​விட்​டு, அனு​மதி பெற்​றதை​விட அதிக நடை மணல் அள்​ளுவர். அதற்​குத் தக்​க​வாறு பேரம் பேச வேண்​டும்” என்று பேசிய குரல் பதிவு சமூக வலை​தளங்​களில் வைரலானது.

இந்த குரல் பதி​வைத் தொடர்ந்து உளுந்​தூர்​பேட்டை டிஎஸ்பி பிரதீப்பை காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று உத்​தர​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x