Published : 21 Apr 2025 06:31 AM
Last Updated : 21 Apr 2025 06:31 AM

சென்னை | ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வந்த இடத்தில் ரவுடி கொலை: 2 பேர் கைது

தொண்டை ராஜ்

சென்னை: ஈஸ்​டர் பண்​டிகை கொண்​டாட வந்த இடத்​தில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக 2 பேரை கைது செய்து போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். சென்னை வியாசர்​பாடி உதயசூரியன் நகர், 11வது பிளாக் பகு​தி​யில் வசித்து வந்​தவர் ஆட்டோ ஓட்​டுநர் ராஜ் என்ற தொண்டை ராஜ் (40).

இவர் மீது கொலை உள்பட 12 குற்ற வழக்​கு​கள் உள்​ளது.‘ஏ பிளஸ்’ பிரிவு ரவுடி​யான இவருக்கு எதிர் தரப்​பிலிருந்து தொடர்ந்து மிரட்​டல் வந்​ததையடுத்​து, இருப்​பிடத்தை கடந்த ஒரு வருடத்​துக்கு முன்​னர் மணலி சின்​ன​சேக்​காடு, வேதாச்​சலம் தெரு​வுக்கு மாற்​றி​னார்.

இந்​நிலை​யில், நேற்று ஈஸ்​டர் பண்​டிகையை என்​ப​தால் ராஜ் வியாசர்​பாடி​யில் உள்ள உறவினர் வீட்​டுக்கு வந்​திருந்​தார். நேற்று மாலை 5.30 மணி​யள​வில் வியாசர்​பாடி, எஸ்​எம் நகர் மெயின் ரோடு 4வது குறுக்​குத் தெரு சந்​திப்பு வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்​த​போது, இருசக்கர வாக​னத்​தில் வந்த 2 பேர் அரி​வாளால் சரமாரி​யாக வெட்டி விட்டு தப்​பினர். இதில், பலத்த காயம் அடைந்த ராஜை அக்​கம் பக்​கத்​தினர் மீட்​டு, ஆட்​டோ​வில் ஸ்டான்லி அரசு மருத்​து​வ​

மனைக்கு கொண்டு சென்​றனர். பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் ராஜ் ஏற்​கெனவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர். இக்​கொலை தொடர்​பாக வியாசர்​பாடி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். முதல் கட்​ட​மாக சம்பவ இடத்​தில் பொருத்​தப்​பட்ட சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் 2 பேரை கைது செய்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x