Published : 17 Apr 2025 06:39 AM
Last Updated : 17 Apr 2025 06:39 AM

புதுக்கோட்டை | இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

அலெக்ஸ்

புதுக்கோட்டை: நாகப்​பட்​டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்​தவர் எம்​. அலெக்​ஸ்​(32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, அவரை கடந்த ஒரு வார​மாக போலீ​ஸார் கண்​காணித்து வந்​தனர்.

இதனிடையே, அவர் புதுக்​கோட்டை வழி​யாக இலங்​கைக்கு படகு மூல​மாக போதைப்​பொருட்​களைக் கடத்தி செல்​ல​விருப்​ப​தாக தகவல் கிடைத்தது.

இந்​நிலை​யில், புதுக்கோட்டை மேல​விலக்​குடி​யில் இருந்த அலெக்ஸை இரு தினங்​களுக்கு முன் கைது செய்த மத்​திய போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார், அவரிட​மிருந்த 950 கிராம் எடை​யுள்ள, ரூ.8 கோடி மதிப்பிலான மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப் பொருளை​யும், ரூ.2 லட்​சம் ரொக்​கத்​தை​யும் பறிமுதல் செய்​தனர்.

பின்​னர், புதுக்​கோட்டை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் அலெக்ஸை நேற்று முன்​தினம் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர். தற்​போது கைதாகி​யுள்ள அலெக்ஸ் மீது பல்​வேறு மாநிலங்​களில் இருந்து இலங்​கைக்கு போதைப்​பொருள் கடத்​தி​யது தொடர்​பான வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​ப​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x