Published : 15 Apr 2025 05:50 AM
Last Updated : 15 Apr 2025 05:50 AM

சென்னை | நெகிழி பைகளை பறிமுதல் செய்த சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்: பழக்கடை உரிமையாளர் கைது

சென்னை: நெகிழி பைகளை பறிமுதல் செய்த சுகாதார த்துறை ஆய்வாளரை தாக்கிய பழக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பாடி பகுதியில் வசித்து வருபவர் பாலகுரு. இவர் சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12-ம் தேதி காலை, ஜெ.ஜெ. நகர், கலைவாணர் நகர் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களுடன், அப்பகுதியில் உள்ள கடைகளில் நெகிழி பைகள் பயன்டுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு பழக்கடை தள்ளுவண்டியில் நெகிழி பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. உடனே, பாலகுரு சம்பந்தப்பட்ட பழக்கடையில் இருந்த நெகிழி பைகளை பறிமுதல் செய்தார். இதனால், அதன் உரிமையாளர் பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்த பூங்காவனம் (40) அதிர்ச்சி அடைந்தார்.

பாலகுருவை திட்டினார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சுகாதார ஆய்வாளரை பூங்காவனம் தாக்கினார். அதிர்ச்சி அடைந்த பாலகுரு இதுதொடர்பாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பூங்காவனத்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x