Published : 10 Apr 2025 06:20 AM
Last Updated : 10 Apr 2025 06:20 AM
தூத்துக்குடி: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடத்தை சேர்ந்த ஜெபராஜ் (27), கதிர்வேல் நகரைச் சேர்ந்த சூரியராஜன் (34), புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோசுவாராஜ் (25) ஆகியோர் 2019-ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட ஜெபராஜ், சூரியராஜன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ஜோசுவாராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT