Published : 10 Apr 2025 06:16 AM
Last Updated : 10 Apr 2025 06:16 AM

சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து காவல் நிலையம் முன் விஷமருந்திய இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட கீர்த்திகா. (அடுத்த படம்) உடலை வாங்க மறுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார். | படம்: ஆர்.வெங்கடேஷ் |

தஞ்சாவூர்: சகோ​தரரை போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றதைக் கண்​டித்து காவல் நிலை​யம் முன் விஷமருந்​திய சகோ​தரி​கள் 2 பேரில் ஒரு​வர் நேற்று சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்​கள் போராட்டத்​தில் ஈடுபட்​டனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் நடுக்​கா​வேரியைச் சேர்ந்​தவர் அய்​யா​வு. கள்​ளச்​சந்​தை​யில் மது விற்​பனை செய்து வந்​துள்​ளார். இவரது மகன் தினேஷ்(32), மகள்​கள் மேன​கா(31), கீர்த்​தி​கா(29). தினேஷ் மீது 10-க்​கும் அதி​க​மான வழக்​கு​கள் உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதனிடையே, அண்​மை​யில் அய்​யா​வுவை அப்​பகு​தி​யைச் சேர்ந்த சிலர் அணுகி, கள்​ளச்​சந்​தை​யில் மது​பானம் விற்​றுத் தரு​மாறு கேட்​டுள்​ளனர். அவர்​களை தினேஷ் கண்​டித்​துள்​ளார். இதனால் இரு தரப்​பினருக்​கிடையே கைகலப்பு நேரிட்​டுள்​ளது. அப்​போது, தினேஷ் ஆயுதங்​களால் அவர்​களைத் தாக்​கி, மிரட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக நடுக்​கா​வேரி காவல் ஆய்​வாளர் சர்​மிளா மற்​றும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் தினேஷை விசா​ரணைக்​காக காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அப்​போது, தினேஷின் சகோ​தரி மேன​கா, தனக்கு நிச்​சய​தார்த்​தம் நடை​பெற​விருப்​ப​தால் தினேஷை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்ல வேண்​டாம் என போலீ​ஸாரிடம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். ஆனால், போலீ​ஸார் தினேஷை அழைத்​துச் சென்று வழக்​குப் பதிவு செய்​து, புதுக்​கோட்டை சிறை​யில் அடைத்​தனர்.

இதைக் கண்​டித்து அன்று மாலை தினேஷின் சகோ​தரி​கள் 2 பேரும் நடுக்​கா​வேரி காவல் நிலை​யம் முன்பு விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்​றனர். இதையறிந்த போலீ​ஸார் 2 பேரை​யும் மீட்​டு, தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். இந்​நிலை​யில், கீர்த்​திகா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்​தார். மேனகா தீவிர சிகிச்​சை​யில் உள்ளார்.

தகவலறிந்த உறவினர்​கள் 100-க்​கும் அதி​க​மானோர் மருத்​து​வக் கல்​லுாரி மருத்​து​வ​மனை​யில் திரண்​டு, கீர்த்​திகா உயி​ரிழப்​புக்கு காவல் ஆய்​வாளர் சர்​மிளா​தான் காரணம் என்று குற்​றம்​சாட்​டி, அவரைப் பணி​யிடை நீக்​கம் செய்ய வேண்​டும் என முழக்​கமிட்​டனர்.

மேலும், கீர்த்​தி​கா​வின் உடலை வாங்க மறுத்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​களிடம் தஞ்​சாவூர் டிஎஸ்பி சோமசுந்​தரம் மற்​றும் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். உயி​ரிழந்த கீர்த்​திகா பி.இ. படித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x