Published : 25 Feb 2025 07:45 AM
Last Updated : 25 Feb 2025 07:45 AM

தருமபுரி அருகே கம்பைநல்​லூரில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு: நடந்தது என்ன?

தரு​மபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்​தில் பட்டாசுகள் வெடித்​த​தில் அங்கு பணியாற்றிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்​தனர்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்​லூர் அருகே​உள்ள பூமி நத்தம் பகுதி​யில் சின்னதுரை என்பவருக்​குச் சொந்​தமான பட்டாசுகள் தயாரிக்​கும் ஆலை மற்றும் குடோன் உள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு... இங்கு கம்பைநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சகோதரி​களான செண்​பகம் (35), திரு​மலர் (37), மற்றும் திரு​மஞ்சு (34) ஆகியோர் நேற்று பணியில் இருந்​தனர். பிற்​பகல் 2 மணியள​வில் பட்டாசு தயாரிக்க வைத்​திருந்த வெடி பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்​துடன் வெடித்​துச் சிதறின. இதில், பட்டாசு குடோன் கட்டிடம் இடிந்து தரை மட்ட​மானது. இந்த விபத்​தில், குடோனில் வேலை செய்து கொண்​டிருந்த செண்​பகம், திரு​மலர், திரு​மஞ்சு ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்​தனர்.

வெடி​விபத்​தால் ஏற்பட்ட தீயைஅரூர் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி அணைத்​தனர். விபத்து குறித்து கம்பை நல்லூர் போலீ​ஸார் விசா​ரித்து வருகின்​றனர். ஆட்சியர் நேரில் ஆய்வு விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ், ஆ.மணி எம்.பி,காவல் கண்காணிப்​பாளர் மகேஸ்​வரன், அரூர்டிஎஸ்பி கரிகால் பாரிசங்​கர்,சம்பத்​கு​மார் எம்எல்ஏ, முன்​னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்​டோர் சம்பவ இடத்​துக்​குச் சென்று பார்​வை​யிட்டனர்.

தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: இந்நிலை​யில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “தருமபுரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்​ததையறிந்து வேதனை அடைந்​தேன். இந்த விபத்​தில் உயிரிழந்தவர்களின்குடும்பத்​தினருக்கும், அவர்களதுஉறவினர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் ​கொள்​கிறேன்.

உயி​ரிழந்​தவர்​களின் குடும்பத்​தினருக்கு தலா ரூ.4 லட்​சம் ​முதலமைச்​சரின் பொது நிவாரண நி​தியிலிருந்து வழங்க உத்​தர​விட்​ள்​ளேன்” என தெரி​வித்​துள்​ளார்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x