Published : 25 Feb 2025 05:35 AM
Last Updated : 25 Feb 2025 05:35 AM

சென்னை | ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் நகைப் பையை திருடிய வழக்கில் கைதான காவலர் பணியிடை நீக்கம்

சென்னை: மைசூரில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இளம் பெண்​ணின் நகைப் பையை திருடிய வழக்​கில், கைது செய்​யப்​பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். சென்னை சூளைமேடு பாட்ஷா தெரு​வைச் சேர்ந்த அருண்​ராஜ் மனைவி ரேணுகா (30).

இவர் கடந்த 23-ம் தேதி மைசூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் அதிகாலை பயணம் செய்து கொண்​டிருந்​தார். இந்த ரயில் வாலாஜா ரயில் நிலையம் வந்த​போது அதில் ஏறிய ஓர் இளைஞர், ரேணு​கா​வின் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் இருந்த கைப்​பையை பறித்தார். சுதா​ரித்​துக் கொண்டு எழுந்த ரேணுகா, கைப்​பையை தருமாறு கேட்​ட​போது, அந்த நபர் பையை ரயிலிலிருந்து வெளியே வீசி​யெறிந்​தார்.

அபாயச் சங்கி​லியை பிடித்து இழுத்து ரயிலை ரேணுகா நிறுத்​தினார். தொடர்ந்து, திரு​முல்​லை​வா​யில் - அம்பத்​தூர் ரயில் நிலை​யங்​களுக்கு இடையே தண்ட​வாளம் அருகே கிடந்த பையை எடுத்​துக்​கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து புகார் செய்தார்.

இதற்​கடை​யில், அந்த நபரை ஆர்பிஎஃப் போலீ​ஸார் பிடித்து, சென்ட்ரல் ரயில்வே போலீ​ஸாரிடம் ஒப்படைத்​தனர். அந்த நபர் ராணிப்​பேட்டை மாவட்​டத்​தைச் சேர்ந்த வசந்​த கு​மார் (33) என்பதும், சென்னை ஓட்டேரி காவல் நிலைய குற்​றப்​பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றும் முதல்​நிலை காவலர் என்பதும் தெரிய​வந்​தது.

அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்​கிடை​யில், ​காவலர் வசந்​தகு​மாரை பணி​யிடை நீக்​கம் செய்து, சென்னை ​காவல் ஆணை​யர் அருண் உத்​தரவு பிறப்​பித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x