Last Updated : 22 Feb, 2025 12:16 AM

 

Published : 22 Feb 2025 12:16 AM
Last Updated : 22 Feb 2025 12:16 AM

கிருஷ்ணகிரி மலையில் அதிர்ச்சி: பெண்​ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது: நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி பொன்​மலைக்​குட்டை பெரு​மாள் கோ​யில் பகு​தி​யில் துப்​பாக்​கிச் சூடு நடந்த இடத்​தில் ​விசாரணை நடத்​திய போலீஸார்.

கிருஷ்ணகிரி மலையில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் தப்பியோடிய ஒருவரை துப்பாக்கியால் போலீஸார் சுட்டுபிடித்தனர். மேலும், ஒருவருக்கு கால் முறிவும், 2 பேரை போலீஸார் கைது செயதனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்றனர். அவர்கள் மலையின் உச்சிக்கு சென்ற போது அங்கு 4 இளைஞர்கள் மது போதையில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அந்த பெண்ணையும், உடன் வந்தவரையும் கத்தி முனையில் மிரட்டி 4 இளைஞர்களும், பெண் அணிந்திருந்த தங்க நகைகளை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்தனர். தொடர்ந்து 4 இளைஞர்களில், 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தை உடனிருந்த 2 பேர், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும், அந்த பெண்ணுடன் வந்தவரின் செல்போனை பறித்த கும்பல், அவரது ஜிபே செயலி மூலம் ரூ.7 ஆயிரம் பறித்துக் கொண்டனர். இந்நிலையில், மலையில் இருந்து கீழே இறங்கி வந்த ஆண் மற்றும் பெண் மிகவும் சோர்வாக அழுதபடி வந்தததை, கண்ட அங்கிருந்தவர்கள் விசாரித்த போது, மலையில் நடந்த சம்பவத்தை கூறினர். மேலும்,போலீஸில் புகார் அளிக்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை, தனிப்படை அமைத்து முழுமையாக விசாரணை நடத்தஉத்தரவிட்டார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) மற்றும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என தெரிந்தது. இதையடுத்து கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீஸார் தேடி வந்தநிலையில், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

துப்பாக்கி சூடு: இதனை தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, எஸ்ஐ பிரபாகர், முதல்நிலை காவலர் குமார், காவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீஸாரை கண்டதும் சுரேஷ், நாராயணன் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸார் குமார், விஜய்குமாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர். இதையடுத்து போலீஸார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் முதலில் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து சுரேசும், நாராயணனும் ஓட முயற்சி செய்யவே, சுரேசின் வலது முட்டில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் அங்கேயே கீழே விழுந்தார். மேலும், தப்பியோடிய நாராயணன் கீழே விழுந்ததில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட சுரேஷ், அபிஷேக், கலை​யரசன், நாராயணன்.

எஸ்பி விசாரணை: இச்சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த எஸ்பி தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த போலீஸார் குமார், விஜயகுமார் மற்றும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிவு ஏற்பட்ட நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடத்தை எஸ்பி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன், தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரேஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகள்: இதுகுறித்து எஸ்பி தங்கதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மலை பகுதியில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வந்திருந்தனர். அவர்களில் அந்த பெண்ணை 4 பேர் மிரட்டி நகை, பணத்தை பறித்தனர். இதில் 2 பேர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் அடையாளம் காணப்பட்டதில், நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்தனர். இன்று(நேற்று) பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருந்த 2 பேரை பிடிக்க சென்ற போலீஸாரை தாக்கினர். அப்போது போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. கைதான சுரேஷ் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x